நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2025 மே மாதத்திற்கான தனியார் மற்றும் வர்த்தக சுரங்கங்களின் மாதாந்திர உற்பத்தி மற்றும் விநியோகம்

Posted On: 02 JUN 2025 4:40PM by PIB Chennai

2025 மே மாதத்திற்கான தனிப் பயன்பாட்டுக்கான சுரங்கங்கள் மற்றும் வர்த்தக சுரங்கங்களிலிருந்து நிலக்கரி உற்பத்தி வலுவான நிலையை எட்டியுள்ளது.

2025 மே மாதத்தில் மொத்தம் 16.432 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டது.  இது 2024 மே மாதத்துடன் ஒப்பிடும்போது 24.57 சதவீதம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை காட்டுகிறது.

உற்பத்தியுடன், நிலக்கரி விநியோகமும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. 2025 மே மாதத்தில் மொத்தம் 17.499 மில்லியன் டன் நிலக்கரி விநியோகிக்கப்பட்டுள்ளது. இது 2024 மே மாதத்துடன் ஒப்பிடும்போது 13.763% அதிகரித்துள்ளதை காட்டுகிறது. உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஏற்பட்ட வளர்ச்சியானது மின்சாரம், எஃகு மற்றும் சிமென்ட் போன்ற முக்கியமான தொழில்களுக்கு நிலையான நிலக்கரி விநியோகத்தை உறுதி செய்கிறது.

கூடுதலாக, மே மாதத்தில், மூன்று முக்கியமான அனுமதிகள் பெறப்பட்டன. அவற்றில் நிலை-I மற்றும் நிலை-II வன அனுமதிகள் மற்றும் வெவ்வேறு நிலக்கரித் தொகுதிகளுக்கான சுரங்க குத்தகை செயல்படுத்தல் ஆகியவை அடங்கும்.

 

மேலும், ஆறு நிலக்கரித் தொகுதிகளுக்கான உரிமை ஆணைகள் 2025 மே 29 அன்று கையெழுத்திடப்பட்டன. இவை மகாராஷ்டிரா (1), ஒடிசா (1), சத்தீஸ்கர் (2), ஜார்கண்ட் (1) மற்றும் மத்தியப் பிரதேசம் (1) உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் அமைந்துள்ளன. இவை அனைத்தும் 11வது தவணை ஏலத்தின் கீழ் உள்ளன.

நிலக்கரி உற்பத்தியை மேம்படுத்துவதற்கும், தற்சார்பு பாரதத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு பங்களிப்பதற்கும் நிலக்கரி அமைச்சகத்தின் தொடர்ச்சியான முயற்சிகளை இந்த நேர்மறையான முன்னேற்றங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

***

(Release ID: 2133290)

AD/TS/GK/LDN/KR/DL


(Release ID: 2133355)
Read this release in: English , Urdu , Hindi