அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
பாரத்ஜென் உச்சி மாநாட்டில், இந்திய மொழிகளுக்காக அரசு நிதியுதவியுடன் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பன்முக பெரும் மொழி மாதிரியை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்
Posted On:
02 JUN 2025 5:25PM by PIB Chennai
பாரத்ஜென் உச்சி மாநாட்டில், இந்திய மொழிகளுக்காக அரசு நிதியுதவியுடன் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட, பன்முக பெரும் மொழி மாதிரியை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்.
பாரத்ஜென், இந்தியாவின் மொழியியல் மற்றும் கலாச்சார சூழலில் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியில் புரட்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முயற்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் ஆதரிக்கப்படுகிறது மற்றும் முன்னணி கல்வி நிறுவனங்கள், நிபுணர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களின் வலுவான கூட்டமைப்பை ஒன்றிணைக்கிறது.
இந்த உச்சிமாநாட்டில் பேசிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், பாரத்ஜென் நிறுவனத்தை "அறநெறி சார்ந்த அனைவரையும் உள்ளடக்கிய, பன்மொழி பயன்பாடு கொண்ட மற்றும் இந்திய விழுமியங்கள் ஆழமாக வேரூன்றிய செயற்கை நுண்ணறிவை உருவாக்குவதற்கான தேசிய இயக்கம்" என்று விவரித்தார். இந்த தளம் உரை, பேச்சு மற்றும் பட முறைகளை ஒருங்கிணைத்து, 22 இந்திய மொழிகளில் தடையற்ற செயற்கை நுண்ணறிவு தீர்வுகளை வழங்கும் என்று அவர் தெரிவித்தார்.
"இந்த முயற்சி சுகாதாரம், கல்வி, வேளாண்மை, நிர்வாகம் போன்ற முக்கியமான துறைகளுக்கு அதிகாரம் அளிக்கும். ஒவ்வொரு இந்தியரையும் புரிந்துகொண்டு சேவை செய்யும் மற்றும் பிராந்திய அளவில் குறிப்பிட்ட செயற்கை நுண்ணறிவு தீர்வுகளை வழங்கும்," என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
***
(Release ID: 2133312)
AD/TS/IR/RR/KR/DL
(Release ID: 2133349)