விவசாயத்துறை அமைச்சகம்
பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் 'ஒருங்கிணைந்த மனிதநேயம்' என்ற தத்துவத்தின் 60வது ஆண்டு நிறைவையொட்டி நடைபெற்ற தேசிய நினைவு கருத்தரங்கில் மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்றார்
Posted On:
01 JUN 2025 8:29PM by PIB Chennai
பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின் 'ஒருங்கிணைந்த மனிதநேயம்' என்ற தத்துவத்தின் 60வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, புதுதில்லியில் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய நினைவு கருத்தரங்கில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் உரையாற்றினார். இந்த நிகழ்வில், 'ஒருங்கிணைந்த மனிதநேயம்' என்றால் என்ன என்பதை மத்திய அமைச்சர் விளக்கினார், மேலும் தற்போதைய சூழலில் அதன் பொருத்தத்தை எடுத்துரைத்தார்.
கருத்தரங்கில் உரையாற்றிய திரு சிவராஜ் சிங் சவுகான், "இன்று உலகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் 'ஒருங்கிணைந்த மனிதநேயம்' என்ற தத்துவத்தில் உள்ளன. இது ஒரு சிக்கலான தத்துவம் அல்ல; மாறாக, அது இந்திய சிந்தனையின் சாராம்சம்”, என்று கூறினார்.
'ஒருங்கிணைந்த மனிதநேயத்தின்' முக்கிய கொள்கை, ஒற்றை உணர்வு என்று அமைச்சர் கூறினார். இந்த உணர்வு இயற்கையிலும் உள்ளது. இந்தக் கொள்கையின் கீழ், அனைவரும் மாபெரும் மரம் நடும் பிரச்சாரத்தில் பங்கேற்று, தங்கள் தாயின் பெயரில் ஒரு மரத்தை நட வேண்டும். இயற்கையை நாம் சுரண்டக்கூடாது, மாறாக அதை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்த வேண்டும். மரங்கள் புனிதமானவை. பூமி மனிதர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து உயிரினங்களுக்கும் அதில் சம உரிமை உண்டு, அவற்றை நாம் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். கிராமப்புற வறுமை குறைந்து வருவதையும், நாட்டில் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்டுள்ள நேர்மறையான மாற்றங்களையும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
வேளாண் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைப் பற்றி விவாதித்த மத்திய அமைச்சர், சமீபத்தில் இரண்டு புதிய நெல் ரகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும், அவை விளைச்சலை 30% அதிகரிப்பதுடன், 20% குறைவான தண்ணீர் தேவைப்படும் என்றும், 20 நாட்களுக்கு முன்பே முதிர்ச்சியடையும் என்றும் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2133179
AD/BR/KR
(Release ID: 2133179)
(Release ID: 2133210)