இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய சாரண சாரணியர் இயக்கத்துக்கு புதுதில்லியில் உள்ள பூடான் சாரணர் இயக்கத்தின் உறுப்பினர்கள் அறிமுகம்

Posted On: 29 MAY 2025 2:43PM by PIB Chennai

இந்திய சாரண சாரணியர் இயக்கம் நேற்று (2025,  மே 28 - ம் தேதி)  பிற்பகல் 3:00 மணிக்கு புது தில்லியில் உள்ள தேசிய தலைமையகத்தில், பூடான் சாரணர் இயக்கத்தின் 24 பேர் கொண்ட குழுவுடன் அறிமுக நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது. அவர்கள் அனைவரும் தற்போது தங்களது கல்வித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவில் பயணம் மேற்கொண்டு உள்ளனர்.

சாரதா பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியரும், தேசிய மாணவர் படையின் இணை அதிகாரியும், தொழில்துறை ஒருங்கிணைப்பு மற்றும் அறிவுசார் பரிமாற்றப் பிரிவின் உதவி இயக்குநருமான லெப்டினன்ட் யசோதரா ராஜ் பூடான் சாரண இயக்கத்தின் குழுவினருடன் இந்திய  சாரண சாரணியர் இயக்கத்தைப் பார்வையிட்டனர். பூடான் பங்கேற்பாளர்களுக்கு அவர்களின் கல்வித் திட்டத்திற்கான  வழிகாட்டியாக லெப்டினன்ட் யசோதரா ராஜ் உள்ளார்.

கடற்படைத் தலைமையகத்தில் தூதுக்குழுவிற்கு அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பொது வணக்கம் மற்றும் இந்திய சாரணர் குழுவின்  பிரார்த்தனையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. அதைத் தொடர்ந்து பூடான் சாரணர் குழுவின் பிரார்த்தனையும் நடைபெற்றது. இந்திய சாரண சாரணியர் இயக்கத்தின் நிர்வாக இயக்குநர் திரு அமர் பி. சேத்ரி வரவேற்பு உரை நிகழ்த்தியதுடன், கடற்படைத் தலைமையகத்தின் பணியாளர்களையும் அறிமுகப்படுத்தினார். பின்னர் அவர், தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுமாறு பூடான் சாரணர் சங்க உறுப்பினர்களுக்கு  அழைப்பு விடுத்தார். இந்திய சாரணர் இயக்கம் மற்றும் வழிகாட்டிக் குழு இயக்குநர் திருமதி தர்ஷனா பவாஸ்கர், லெப்டினன்ட் யசோதரா ராஜுக்கு சாரணர் இயக்க கழுத்துப்பட்டையை (ஸ்கார்ஃப்) வழங்கினார்.

இந்திய சாரண இயக்கம்  மற்றும் வழிகாட்டுதல் குழுவின் துணை இயக்குநர் (சிறுவர் திட்டம்) திரு அருப் சர்க்கார், அந்த இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து விவரித்தார். 1909 - ம் ஆண்டு இந்தியாவில்  தொடங்கப்பட்ட சாரண சாரணியர் இயக்கம், 'இந்திய சாரண இயக்கம் மற்றும் வழிகாட்டுக் குழுவுடன்' இணைக்கப்பட்டது. மத்திய அரசால் இக்குழுவிற்கு பல்வேறு மதிப்புமிக்க விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. சுய அறிமுகத்தின் போது, பூடான் சாரணர் குழு தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டதுடன், இரு நாடுகளின் சாரணர் இயக்கங்களுக்கு இடையிலான நீடித்த நட்பை எடுத்துரைத்தனர். எஸ்ஓசிஎன்சி அமைப்பின்   சிறப்பு இயக்குனரான திரு பிரசன்னா ஸ்ரீவஸ்தவா, சாரணர் இயக்கத்தின் அர்ப்பணிப்பு மற்றும் சேவைகளுக்காக பூடான் சாரணர் குழுவிற்கு பாராட்டு தெரிவித்தார். சாரணர் இயக்கம் என்பது ஒரு சிறந்த குடிமகனின் அடையாளம் என்று தெரிவித்த அவர், 1994 மற்றும் 1999 - ம் ஆண்டுகளுக்கு இடையில் பூடானில் உள்ள சாரணர் இயக்கத்தில் தனது  தொடக்ககால நிகழ்வுகளை  நினைவு கூர்ந்தார். மத்தியப் பிரதேச மாநிலம் பச்மாரியில் நடந்த தலைமைத்துவ பண்பு குறித்த பயிற்சிக்கான படிப்புகள் மற்றும் நாடு முழுவதிலும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டதில் பூட்டான் சாரண சங்க உறுப்பினர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தேசிய தலைமையகத்தை சுற்றிப் பார்த்த குழுவினர், பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொண்டனர். மேலும் அங்குள்ள சாதனங்கள் விற்பனையகத்தை பார்வையிட்ட அவர்கள், அங்கு இலக்கியம், சீருடைகள் மற்றும் பரிசுப் பொருட்கள் உள்ளிட்ட நினைவுப் பொருட்களை வாங்கினர். திருச்சி, தமிழ்நாடு பெருந்திரளணி (ஜம்போரி) இடம்பெறும் வீடியோ விளக்கக்காட்சியையும் அவர்கள் ரசித்தனர். நினைவுப் பரிசுப் பரிமாற்றத்துடன் இந்த நிகழ்ச்சி நிறைவடைந்தது.

இந்நிகழ்ச்சியில் நிறைவுரையாற்றிய இந்திய சாரணர் குழுவின்  இயக்குனர் திருமதி. தர்ஷனா பவாஸ்கர், இந்தியா - பூடான் நாடுகளிடையேயான நட்புறவு, அண்டை நாடுகளுடனான உறவுகள் மற்றும் சாரணர் / வழிகாட்டுதல் ஆகியவற்றின் பிணைப்பு தொடர்ந்து வலுவடையும் என்று நம்பிக்கை தெரிவித்தார். எதிர்கால நிகழ்வுகளில் பூடான் பங்கேற்பதற்கு முழு ஆதரவு அளிப்பதாகவும் அவர் உறுதியளித்தார். மேலும் ஜம்போரிகளுக்கான அதிகரிக்கப்பட்ட இட  ஒதுக்கீடு பூடான் சாரணர் சங்கத்திற்கு வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். நன்றி வாக்கெடுப்பு மற்றும் குழு புகைப்படத்துடன், நிகழ்ச்சி நிறைவடைந்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2132295

 

******

AD/TS/SV/KPG/RR/DL


(Release ID: 2132448)
Read this release in: English , Urdu , Hindi