தேர்தல் ஆணையம்
4 மாநிலங்களைச் சேர்ந்த 373 தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் பயிற்சியைத் தொடங்கியது
Posted On:
29 MAY 2025 3:13PM by PIB Chennai
வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான எட்டாவது பயிற்சி இன்று புதுதில்லியில் உள்ள இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை நிறுவனத்தில் தொடங்கியது. சத்தீஸ்கர், ஹரியானா, மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள், வாக்குச்சாவடி நிலை மேற்பார்வையாளர்கள், தேர்தல் பதிவு அதிகாரிகள் உள்ளிட்ட பயிற்சித் திட்டத்தில் பங்கேற்றவர்களிடம் தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ்குமார் உரையாற்றினார். உத்தரப் பிரதேசத்திலிருந்து 118 பேர், மத்தியப் பிரதேசத்திலிருந்து 130 பேர், சத்தீஸ்கரிலிருந்து 96 பேர், ஹரியானாவிலிருந்து 29 பேர் என மொத்தம் 373 பேர் இப்பயிற்சியில் பங்கேற்றுள்ளனர். புதுதில்லியில் தேர்தல் ஆணையம் கடந்த இரண்டு மாதங்களில் 3,720 க்கும் மேற்பட்ட கள அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்துள்ளது.
இன்றைய பயிற்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ் குமார், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950, வாக்காளர் பதிவு விதிகள் 1960, தேர்தல் நடத்தை விதிகள், 1961 மற்றும் அவ்வப்போது தேர்தல் ஆணையம் வெளியிடும் அறிவுறுத்தல்களின்படி தேர்தல்கள் கண்டிப்பாக நடத்தப்படுவதை உறுதி செய்வதற்கு இந்தப் பயிற்சித் திட்டங்கள் அவசியம் என்று கூறினார்.
2025 ஜனவரி 6-10 வரை நடைபெற்ற சிறப்பு சுருக்க திருத்தம் முடிந்த பிறகு சத்தீஸ்கர், ஹரியானா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து எந்த மேல்முறையீடுகளும் தாக்கல் செய்யப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளலாம்.
வாக்காளர் பதிவு, படிவம் கையாளுதல் மற்றும் தேர்தல் நடைமுறைகளை கள அளவில் செயல்படுத்துதல் ஆகியவற்றில் பங்கேற்பாளர்களின் நடைமுறை புரிதலை மேம்படுத்துவதற்காக இந்தப் பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. பங்கேற்பாளர்களுக்கு தகவல் தொழில்நுட்ப கருவிகள் குறித்த நடைமுறைப் பயிற்சியும் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2132309
***
AD/TS/IR/AG/RR
(Release ID: 2132401)