பாதுகாப்பு அமைச்சகம்
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டம் முக்கிய பங்கு வகித்தது- பாதுகாப்பு அமைச்சர்
Posted On:
29 MAY 2025 12:17PM by PIB Chennai
இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டம் நமது தேசிய பாதுகாப்பில் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது என்றும் இது பயங்கரவாதத்திற்கு எதிரான சிந்தூர் நடவடிக்கையில் முக்கிய பங்கு வகித்தது என்றும் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். புதுதில்லியில் 2025 மே 29 அன்று நடைபெற்ற இந்தியத் தொழில் கூட்டமைப்பின் ஆண்டு வணிக உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் அவர் உரையாற்றினார். மேம்பட்ட நடுத்தர போர் விமானம் திட்டத்தின் செயல்படுத்துதல் மாதிரி மூலம், தனியார் துறை முதன்முறையாக பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து மிகப்பெரிய பாதுகாப்புத்துறை திட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என்றும் இதனால் உள்நாட்டு பாதுகாப்பு திறன்கள் மேலும் வலுப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
5-வது தலைமுறை போர் விமானங்களை இந்தியாவில் உருவாக்குவதற்கான திட்டம் குறித்து அவர் எடுத்துரைத்தார். இது இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்ட வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகும் என்றும் அவர் கூறினார்.
சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தின் வெற்றி குறித்து சுட்டிக்காட்டிய திரு ராஜ்நாத் சிங், நாடு உள்நாட்டு பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்தியிருக்காவிட்டால், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதத்திற்கு எதிராக இந்திய ஆயுதப்படைகள் பயனுள்ள நடவடிக்கைகளை எடுகத்திருக்க முடியாது என்று கூறினார். பாதுகாப்பு மற்றும் செழிப்புக்கு இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டம் மிகவும் முக்கியமானது என்று அவர் விவரித்தார். சிந்தூர் நடவடிக்கையின் போது உள்நாட்டு அமைப்புகளைப் பயன்படுத்தியது என்பது எதிரியின் எந்தவொரு கவசத்தையும் ஊடுருவிச் செல்லும் சக்தியை இந்தியா கொண்டுள்ளது என்பதை நிரூபித்துள்ளது என்று கூறினார்.
பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையின் நோக்கத்தையும் இந்தியா மறுபரிசீலனை செய்துள்ளது என்றும், தற்போது பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்றும், புவியியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பிரிந்த மக்கள் விரைவில் அல்லது பின்னர் தானாக முன்வந்து இந்தியா திரும்புவார்கள் என்றும் திரு ராஜ்நாத் சிங் மீண்டும் தெளிவுபடுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2132239
***
AD/TS/IR/AG/RR
(Release ID: 2132262)