தேசிய மனித உரிமைகள் ஆணையம்
ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் காவல்துறை காவலில் இருந்த ஒருவர் உயிரிழந்ததாகக் கூறப்படும் புகாரை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது
Posted On:
28 MAY 2025 3:53PM by PIB Chennai
ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் 2025 - ம் ஆண்டு மே 21 - ம் தேதி காவல்துறையினரின் காவலில் இருந்த ஒருவர் உயிரிழந்ததாக ஊடகங்களில் வெளியான செய்தியை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. சைபர் குற்றம் தொடர்பாக விசாரணைக்காக அவர் தனது வீட்டிலிருந்து பலஜோரி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர், அவர் காவல்துறையினரின் விசாரணையில் உடல் ரீதியாக சித்திரவதை செய்யப்பட்டதாகவும், இதன் விளைவாக அவர் உயிரிழந்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த செய்தியின் உள்ளடக்கம் உண்மையாக இருந்தால், பாதிக்கப்பட்டவரின் மனித உரிமைகள் மீறல் குறித்து கடுமையான பிரச்சினையை எழுப்புவதாக ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே, இந்த விவகாரம் குறித்து ஆறு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு அம்மாநிலத் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் ஆகியோருக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மரணத்திற்கான காரணத்துடன் சேர்த்து, விசாரணை, பிரேதப் பரிசோதனை அறிக்கைகள், மாஜிஸ்திரேட் விசாரணை அறிக்கை என அனைத்து விபரங்களும் இதில் அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காவல்துறையின் காவலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கைதியின் மரணம் குறித்து மாவட்ட காவல்துறை எந்த தகவலையும் தெரிவிக்காமல் இருப்பது, கடுமையான செயலாக ஆணையம் கருதுகிறது. ஆனால், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி, சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கும் அது தொடர்பான விபரங்கள் அனுப்பப்பட வேண்டும். எனவே, இந்த தவறுக்கு ஜார்க்கண்ட் மாநிலத் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குனர் ஆகியோர் விளக்கம் அளிக்கவேண்டும் என்று ஆணையம் கோரியுள்ளது.
2025 - ம் ஆண்டு மே 22 - ம் தேதி வெளியிடப்பட்ட ஊடக செய்திகளின் அடிப்படையில், காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டபோது பாதிக்கப்பட்டவரின் உடல்நிலை மோசமடைந்த நிலையில், அவர் தியோகர் சதார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும், அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர் அவர் உயிரிழந்து விட்டதாக அறிவித்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2132022
***
AD/SM/SMB/AG/RR
(Release ID: 2132096)