உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
தொழில்நுட்பம் சார்ந்த ஊட்டச்சத்து கண்காணிப்பை கடைபிடிக்கவும் புத்தாக்க கண்டுபிடிப்புகளை மேற்கோள்ளவும் குண்ட்லி தேசிய உணவுத் தொழில்நுட்ப தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்துக்கு உணவுப் பதப்படுத்துதல் தொழில் துறை செயலாளர் வலியுறுத்தல்
Posted On:
27 MAY 2025 12:37PM by PIB Chennai
உணவு பதப்படுத்தல் தொழில்கள் அமைச்சகமானது குண்ட்லி தேசிய உணவு தொழில்நுட்ப தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்துடன் இணைந்து ஒரு நாள் பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்தது. இந்தப் பயிலரங்கு நவீன உணவில் அறிவியல், நுகர்வு மற்றும் தேர்வுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.
இப்பயிலரங்கில் உரையாற்றிய உணவுப் பதப்படுத்துதல் தொழில்கள் செயலாளர் டாக்டர் சுப்ரதா குப்தா, தற்போதைய விரைவான உலகில், ஆரோக்கியம் மற்றும் உணவுமுறை முன்னெப்போதையும் விட மிகவும் முக்கியமானதாகிவிட்டன என்பதை வலியுறுத்தினார். நாள்தோறும் உடல் செயல்பாடுகளைக் கண்காணிக்க ஸ்மார்ட்-வாட்ச்சுகளின் பயன்பாடு அதிகரித்து வருவதிலிருந்து இது தெளிவாவதாகக் குறிப்பிட்டார். நாம் நாள்தோறும் எத்தனை அடிகள் நடக்கிறோம் என்பதைக் கண்காணிக்கும் அதே வேளையில், ஒவ்வொரு நாளும் எவ்வளவு ஆற்றல் அல்லது எத்தனை கலோரிகளை உட்கொள்கிறோம் என்பதைக் கண்காணிக்க பெரும்பாலும் தவறிவிடுகிறோம் என்று தெரிவித்தார்.
இந்த இடைவெளியை நிவர்த்தி செய்ய, ஒரு தனிநபரின் தினசரி கலோரி, ஆற்றல் உட்கொள்ளலை அளவிடும் திறன் கொண்ட ஒரு ஸ்மார்ட் வாட்ச் போன்ற சாதனத்தை உருவாக்குமாறு குண்ட்லி தேசிய உணவு தொழில்நுட்ப தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தை வலியுறுத்தினார். உலகளாவிய சுகாதார சூழல்களைக் குறிப்பிட்ட அவர், உலகளவில் மூன்றில் இரண்டு பங்கு இறப்புகள் தொற்றாத நோய்களால் ஏற்படுகின்றன என்பதை எடுத்துக் காட்டும் உலக சுகாதார அமைப்பு மற்றும் இந்திய மருத்துவக் குழுமம் தரவுகளை அவர் சுட்டிக்காட்டினார். பதப்படுத்தப்பட்ட பொருட்களில் உணவு கலப்படம் மற்றும் பெரிய அளவில் உணவை வீணாக்குதல் போன்ற கவலைகளையும் அவர் எடுத்துரைத்தார்.
குண்ட்லி தேசிய உணவு தொழில்நுட்ப தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் ஹரிந்தர் சிங் ஓபராய் உரையாற்றிய போது, என்சிஇஆர்டி பாடப்புத்தகங்களில் உணவு பதப்படுத்துதல் குறித்த பிரிவுகளைச் சேர்க்க நிறுவனம் விரைவில் பரிந்துரைக்கும் என்று அவர் அறிவித்தார். இந்த முயற்சி சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்துக் கற்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார். பாரம்பரிய இந்திய உணவு முறையைக் குறிப்பிட்ட அவர், உணவே மருந்தாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2131561
*****
AD/TS/IR/KPG/RJ
(Release ID: 2131587)