பாதுகாப்பு அமைச்சகம்
எண்ணெய்க் கசிவை கையாளும் தயார்நிலையை வலுப்படுத்த இந்தியக் கடலோரக் காவல்படை மற்றும் ஹால்டியா துறைமுக வளாகம் இணைந்து கடல் மாசுபாட்டை எதிர்கொள்ளுதல் தொடர்பான பயிற்சிப் பட்டறையை நடத்தின
Posted On:
24 MAY 2025 5:22PM by PIB Chennai
இந்திய கடலோர காவல்படை, ஹால்டியா துறைமுக வளாகத்துடன் இணைந்து, மே மாதம் 21–22, ஆகிய தேதிகளில் இரண்டு நாள் கடல் மாசுபாடு மீட்பு நடவடிக்கை குறித்த கருத்தரங்கு மற்றும் பயிற்சி பட்டறையை நடத்தியது. ஹால்டியா துறைமுக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, மேற்கு வங்க கடற்கரைப் பகுதியில் எண்ணெய் கசிவு சம்பவங்களை நிர்வகிப்பதில் உள்ள தயார்நிலை, ஒருங்கிணைப்பு மற்றும் விரைவான மீட்பு நடவடிக்கைகளுக்கான திறன்களை மேம்படுத்துவது ஆகிய அம்சங்களை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த கருத்தரங்கை இந்திய கடலோரக் காவல்படைத் தளபதி (மேற்கு வங்கம்) தொடங்கி வைத்து உரையாற்றினார். இந்தக் கருத்தரங்கில் கடலில் எண்ணைக் கசிவால் ஏற்படும் மாசுவிலிருந்து மீட்கும் பிரிவில் இந்திய கடலோரக் காவல்படை மற்றும் ஹால்டியா துறைமுகத்தின் துறை சார்ந்த நிபுணர்களின் செயல் விளக்கக்காட்சிகள் இடம்பெற்றன. மாசுவைக் கட்டுப்படுத்த உதவும் உபகரணங்களின் நடைமுறை செயல்விளக்கம் ஹால்டியா துறைமுக வளாகத்தில் நடைபெற்றது. இது தொடர்புடைய தரப்பினருக்கு அதிநவீன மாசு மீட்பு அமைப்புகளின் திறன்களைப் பற்றிய நேரடி புரிதலை அளித்தது.
கொல்கத்தா துறைமுக அறக்கட்டளை, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், ஹால்டியா சுத்திகரிப்பு நிலையம், ஹால்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம், ரிலையன்ஸ் ஹால்டியா முனையம், பிற கடல்சார் மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறைகளைச் சேர்ந்த பங்குதாரர்கள் இதில் தீவிரமாக பங்கேற்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2130947
****
(Release ID: 2130947)
SM/SV/SG
(Release ID: 2130963)