சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலக தலசீமியா (இரத்த மரபணுக் கோளாறு ) தினத்தையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை நாடு முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது

Posted On: 09 MAY 2025 3:33PM by PIB Chennai

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை, உலக தலசீமியா (இரத்த மரபணுக் கோளாறு ) தினத்தையொட்டி 2025 - ம் ஆண்டு மே 8 - ம் தேதி அதன் துணை தேசிய நிறுவனங்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள பிராந்திய மையங்கள் வாயிலாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த ஆண்டுக்கான கருப்பொருள் 'தலசீமியாவுக்காக   ஒன்றாக இணைதல்: சமூகங்களை ஒன்றிணைத்தல், நோயாளிகளுக்கு முன்னுரிமை அளித்தல்' என்பதாகும். தலசீமியா போன்ற கடுமையான மரபணு தொடர்பான இரத்தக் கோளாறுகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்கும், இந்த நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடுவதற்கும் இந்த தினம்  அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

தலசீமியா என்பது ஒரு மரபணு சார்ந்த ஆட்டோசோமல் ரீசீசிவ் கோளாறு ஆகும். இது ஒன்று அல்லது இரண்டு பெற்றோரிடமிருந்தும் பெறப்படுகிறது. இது ஒரு மரபணு மாற்றத்தின் காரணமாக இரத்த சிவப்பணுக்களைப் பாதிக்கிறது. இது ஹீமோகுளோபினின் ஆல்பா அல்லது பீட்டா குளோபின் சங்கிலிகளைக் குறைக்க வழிவகுக்கிறது. இதன் விளைவாக இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி குறைந்து, உடல் பாகங்களுக்கு ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்த விநியோகம் குறைகிறது .

2025 - ம் ஆண்டு உலக தலசீமியா தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறை, அதன் துணை நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் மற்றும் இணையவழிக் கருத்தரங்குகளை ஆகியவற்றிற்கு ஏற்பாடு செய்துள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2127897

***

TS/SV/RR/RR


(Release ID: 2127917)
Read this release in: English , Gujarati , Urdu , Hindi