நிலக்கரி அமைச்சகம்
எஸ்இசிஎல் வலுவான சமூக உறவுகளை உருவாக்க முதல் 'ஸ்னே மிலன் மேளாவை’ ஏற்பாடு செய்கிறது
இடுகை இடப்பட்ட நாள்:
08 MAY 2025 6:46PM by PIB Chennai
உள்ளூர் சமூகங்களுடன் நல்லெண்ணத்தையும் ஆழமான ஈடுபாட்டையும் வளர்ப்பதற்கான ஒரு புதுமையான முயற்சியாக, சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (எஸ்இசிஎல்) சமீபத்தில் சத்தீஸ்கரின் சூரஜ்பூர் மாவட்டத்தின் பட்கான் பகுதியில் தனது முதல் 'சினே மிலன் மேளா'வை ஏற்பாடு செய்தது.
எஸ்இசிஎல் ஊழியர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் அருகிலுள்ள கிராமவாசிகளை ஒன்றிணைத்த இந்த நிகழ்வு, சுரங்க நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கு வசதியாக சீரான நிலம் கையகப்படுத்துதலுக்கு அவசியமான நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான எஸ்இசிஎல்-இன் பரந்த அணுகுமுறையின் ஒரு பகுதியாகும்.
துடிப்பான கூட்டத்தில் பாடல்கள், நடனங்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய சமூக செய்தியுடன் ஒரு சிறப்பு பொம்மலாட்டம் உள்ளிட்ட கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. பெண் ஊழியர்களும் உள்ளூர் பங்கேற்பாளர்களும் பாரம்பரிய உணவு வகைகளை வழங்கும் உணவுக் கடைகளை அமைத்து, பண்டிகை சூழ்நிலையை மேம்படுத்தினர். எஸ்இசிஎல் ஊழியர்கள் மற்றும் அருகிலுள்ள சமூகங்களைச் சேர்ந்த 600 க்கும் மேற்பட்டோர் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர், இது ஒற்றுமை மற்றும் பகிரப்பட்ட முன்னேற்றத்தை வலியுறுத்தியது.
மத்திய நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சர் திரு. ஜி. கிஷன் ரெட்டியின் தொலைநோக்குப் பார்வையுடன் இந்த மேளா ஒத்துப்போகிறது. அவர் சமீபத்தில் எஸ்இசிஎல்க்கு விஜயம் செய்தபோது, நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களுடன் மதிய உணவு சாப்பிட்டு, அடிமட்ட அளவில் ஈடுபாடு மற்றும் தொழிலாளர் நலனின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2127766
***
(Release ID: 2127766)
RB/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2127811)
வருகையாளர் எண்ணிக்கை : 19