ஜல்சக்தி அமைச்சகம்
சுற்றுச்சூழல் மீட்டெடுத்தல் மூலம் கங்கை புனரமைப்புக்கான முக்கியத் திட்டங்களுக்கு 62-வது நிர்வாகக் குழு கூட்டத்தில் தேசிய தூய்மை கங்கை இயக்கம் ஒப்புதல் அளித்துள்ளது
Posted On:
06 MAY 2025 3:48PM by PIB Chennai
தேசிய தூய்மை கங்கை இயக்கத்தின் தலைமை இயக்குநர் திரு ராஜீவ் குமார் மிட்டல் தலைமையில் நடைபெற்ற இந்த இயக்கத்தின் 62-வது நிர்வாகக் குழு கூட்டம் நதிகள் புனரமைப்பில் நீடித்த தன்மை குறித்து கவனம் செலுத்தியது. முக்கியமான சதுப்பு நில பாதுகாப்பு, நகரை மையமாகக் கொண்ட மறு பயன்பாட்டு திட்டங்கள் மூலம் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் பயன்பாட்டை ஊக்குவித்தல் பற்றி இந்தக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது. கங்கை படுகை முழுவதும் சுற்றுச்சூழலை மீட்டெடுப்பதற்கான இயக்கத்தின் நோக்கங்களுக்கு உகந்த திட்டங்களுக்கு இந்தக் குழு ஒப்புதல் அளித்தது.
பீகாரின் போஜ்பூர் மாவட்டத்தில் நாத்மால்பூர் பகத் சதுப்புநில பாதுகாப்பு மற்றும் நீடிக்கத்தக்க நிர்வாக திட்டத்திற்கு நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்தது. இதன் மதிப்பீட்டுச் செலவு ரூ. 3.51 கோடி ஆகும். தேசிய புவிபரப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் 5-வது சதுப்புநில திட்டமாக இது உள்ளது. ஏற்கெனவே, உத்தரப்பிரதேசத்தின் முசாஃபர் நகர் கலேவாடா ஜீல், பிரயாக்ராஜ் நமியா தாஹ் ஜீல், பல்லியா ரியோட்டி தாஹ், ஜார்கண்ட் மாநிலம் சாஹிப்கஞ்ச் உத்வா ஏரி ஆகிய நான்கு சதுப்புநிலத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டங்களுக்கான ஒப்புதல், ஒருங்கிணைந்த நீர் நிர்வாகம், சுற்றுச்சூழல் மீட்பு ஆகிய தேசிய தூய்மை கங்கை இயக்கத்தின் நோக்கத்தை உறுதி செய்கின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2127245
***
SM/SMB/SG/KR
(Release ID: 2127272)