பாதுகாப்பு அமைச்சகம்
ஏர் மார்ஷல் அசுதோஷ் தீட்சித் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைப்பிரிவு தளபதி பொறுப்பை ஏற்றுக்கொண்டார்
Posted On:
01 MAY 2025 2:43PM by PIB Chennai
ஏர் மார்ஷல் அசுதோஷ் தீட்சித் 2025 மே 01 அன்று புதுதில்லியில் உள்ள ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைப்பிரிவு தலைமையகத்தில் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைப்பிரிவு தளபதியாக நியமிக்கப்பட்டார். 2025 ஏப்ரல் 30 அன்று இப்பதவி வகித்த லெப்டினன்ட் ஜெனரல் ஜே.பி. மாத்யூ ஓய்வு பெற்றதையடுத்து அவர் இப்பதவியை ஏற்றுக் கொண்டார். பதவியேற்பதற்கு முன்பாக ஏர் மார்ஷல் அசுதோஷ் தீட்சித் புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து துணிச்சலான வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். சவுத் பிளாக்கில் நடைபெற்ற சம்பிரதாய மரியாதை அணிவகுப்பையும் அவர் பார்வையிட்டார்.
நாற்பது ஆண்டுகளாக பாதுகாப்புப் படையின் பல்வேறு பதவிகளை அவர் வகித்துள்ளார். மேலும் அவரது சேவைகளுக்காக அதி விஷிஷ்ட் சேவா பதக்கம், விஷிஷ்ட் சேவா பதக்கம் மற்றும் வாயு சேனா பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
சி.ஐ.எஸ்.சி.யாக பொறுப்பேற்பதற்கு முன்பு, ஏர் மார்ஷல் அசுதோஷ் தீட்சித், விமானப் படையில் கமாண்டிங் இன் சீஃப் ஆக பணியாற்றி வந்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2125737
****
SM/IR/KPG/RJ
(Release ID: 2125776)
Visitor Counter : 16