உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுஃபலாம் 2025: உணவு பதனப்படுத்துதல் துறையில் புதுமையை ஏற்படுத்தும் முயற்சி

Posted On: 24 APR 2025 5:13PM by PIB Chennai

உணவுப் பதனப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம், குண்ட்லியில் உள்ள நிப்டெம் நிறுவனத்துடன் இணைந்து,  2025 ஏப்ரல் 25-26 தேதிகளில்  சுஃப்லாம் 2025 (ஆர்வமுள்ள தலைவர்கள் மற்றும் வழிகாட்டிகளுக்கான புத்தொழில் மன்றம்) இரண்டாவது பதிப்பை நடத்துகிறது.  அதன் தொடக்க பதிப்பின் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, இந்த ஆண்டு மாநாடு, 'தற்சார்பு இந்தியா' என்ற பார்வைக்கு ஏற்ப ஒரு துடிப்பான புத்தொழில்  சூழல் அமைப்பை வளர்ப்பதற்கான இந்திய அரசின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதாக இருக்கும். இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள முன்முயற்சிகள் மூலம் புதுமை, நிலைத்தன்மை மற்றும் தொழில்முனைவை ஊக்குவிப்பதன் மூலம் உணவு பதனப்படுத்தும் துறையை வலுப்படுத்துவதை இந்த நிகழ்வு நோக்கமாகக் கொண்டுள்ளது.

இரண்டு நாள் கூட்டத்தில் புத்தொழில் நிறுவனங்களை மேம்படுத்துதல், அறிவுப் பகிர்வை எளிதாக்குதல் மற்றும் நெட்வொர்க்கிங் வாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற தொடர்ச்சியான நடவடிக்கைகள் இடம்பெறும். அரசின் திட்டங்கள் மற்றும் மானியங்கள் மூலம் இளம் தொழில்முனைவோருக்கு எளிதாக தொழில் தொடங்க உதவுவதை நோக்கமாகக் கொண்ட இந்த மாநாட்டை மத்திய அமைச்சர் திரு சிராக் பாஸ்வான் தொடங்கி வைக்கிறார். வளர்ந்து வரும் புத்தொழில்  நிறுவனங்களுக்கு ஆதரவளிக்க வழிகாட்டுதல், ஆலோசனை, சேவைகள் மற்றும் அதிநவீன உள்கட்டமைப்புக்கான அணுகல் ஆகியவற்றை இது வழங்கும்.

ஆந்திரா, சத்தீஸ்கர், கேரளா, மணிப்பூர், பீகார், ஒடிசா, மகாராஷ்டிரா, அருணாச்சல பிரதேசம், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் உள்ளிட்ட நாடு முழுவதும் 23 மாநிலங்களைச் சேர்ந்த 250 க்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் இதில் கலந்து கொள்வதற்காக  ஏற்கனவே பதிவு செய்துள்ளன

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2124088

***

TS/PKV/KPG/DL


(Release ID: 2124162) Visitor Counter : 10
Read this release in: English , Urdu , Hindi