நிதி அமைச்சகம்
பயங்கரவாத நிதியுதவியை எதிர்த்துப் போராடுவது குறித்த மத்திய ஆசிய குடியரசுகளுக்கான முதல் திறன் மேம்பாட்டு திட்டத்தை இந்தியா நடத்துகிறது
Posted On:
22 APR 2025 7:38PM by PIB Chennai
வெளியுறவு அமைச்சகம் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் ஆகியவற்றுடன் இணைந்து, மத்திய ஆசிய குடியரசுகளுக்கான முதல் திறன் வளர்ப்பு திட்டத்தை வருவாய்த் துறை வெற்றிகரமாக ஏற்பாடு செய்தது. 'கிரிப்டோகரன்சிகள், கிரவுட் ஃபண்டிங் மற்றும் லாப நோக்கற்ற நிறுவனங்கள் மூலம் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை எதிர்கொள்வது' பற்றி இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது. இரண்டு நாள் நிகழ்ச்சி 2025 ஏப்ரல் 21 முதல் 22 வரை நடைபெற்றது.
உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய ஐந்து மத்திய ஆசிய நாடுகளின் மூத்த நிபுணர்களை ஒன்றிணைக்கும் இந்தத் திட்டம், பயங்கரவாத நிதியுதவியைக் கையாள்வதில் அறிவுசார் பரிமாற்றம் மற்றும் பிராந்திய ஒத்துழைப்புக்கான தளமாக செயல்பட்டது. வருவாய்த் துறையின் நிதி நடவடிக்கை பணிக்குழு பிரிவு, உள்துறை அமைச்சகம், தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் நிதி புலனாய்வு பிரிவு - இந்தியா ஆகியவற்றின் பிரதிநிதிகள் உட்பட இந்திய அதிகாரிகள் தலைமையிலான தொடர்ச்சியான அமர்வுகளில், பங்கேற்பாளர்கள் பயனடைந்தனர்.
மத்திய ஆசிய பிராந்தியத்தின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட இந்தத் திட்டம், தொழில்நுட்ப திறனை வளர்ப்பது மற்றும் வளர்ந்து வரும் பயங்கரவாத நிதியளிப்பு அபாயங்கள் பற்றிய புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. ஊடாடும் விவாதங்கள், வழக்கு ஆய்வுகள் மற்றும் செயல்பாட்டு சிறந்த நடைமுறைகளைப் பகிர்வது மூலம், இந்த முயற்சி முக்கிய சவால்களை எதிர்கொள்வதற்கான கூட்டு அணுகுமுறையை வளர்த்தது.
பயங்கரவாதம் தொடர்பான விசாரணைகளில் நிதி நுண்ணறிவைப் பயன்படுத்துதல், மெய்நிகர் சொத்து சேவை வழங்குநர்களின் தவறான பயன்பாட்டால் அதிகரித்து வரும் அச்சுறுத்தல் மற்றும் கிரவுட்ஃபண்டிங் தளங்களின் சுரண்டல் உள்ளிட்ட பரந்த அளவிலான சிக்கல்களை தொழில்நுட்ப அமர்வுகள் ஆராய்ந்தன. தீவிரமயமாக்கலுக்கு நிதியளித்தல் மற்றும் பயங்கரவாத நோக்கங்களுக்காக லாப நோக்கமற்ற அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவை கூடுதல் விவாதங்களை உள்ளடக்கி இருந்தன.
இந்த முன்முயற்சி பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும், பயங்கரவாத நிதியுதவிக்கு எதிரான நெகிழ்வுதன்மையை வலுப்படுத்துவதிலும் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது, இது உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளுக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2123579
------
RB/DL
(Release ID: 2123647)