புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களை வெளியிடுவதற்கான காலக்கெடுவைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள்
Posted On:
17 APR 2025 4:30PM by PIB Chennai
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) சர்வதேச அளவில் உள்ள சிறந்த நடைமுறைகள் மற்றும் காலக்கெடு தொடர்பான விவகாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கொண்டுவர தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முந்தைய மாதத்தின் தரவுகள் தொடர்பான புள்ளிவிவரங்களை அடுத்த மாதத்தின் 12 நாட்களுக்குள் வெளியிடும் நடைமுறை தற்போது உள்ளது. இது உலகளவில் மிகச் சிறந்த நடைமுறைகளில் ஒன்றாகும். அதேபோல், தேசிய மாதிரி கணக்கெடுப்பு அறிக்கைகள் களப்பணி முடிந்த 90 நாட்களுக்குள் தற்போது வெளியிடப்படுகின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றாவது திருத்தப்பட்ட மதிப்பீடுகளை வெளியிட வேண்டிய தேவையை நீக்கும் வகையில், தேசிய கணக்கு புள்ளி விவர நாட்காட்டி சீரமைக்கப்பட்டுள்ளது. அதே வரிசையில், இந்த அமைச்சகம் வெளியிடும் தொழில்துறை உற்பத்தி தொடர்பான குறியீட்டு எண்களை 42 நாட்களுக்கு பதிலாக 28 நாட்களுக்குள் வெளியிட திட்டமிட்டுள்ளது.
இதன்படி, அகில இந்திய தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண் மாதந்தோறும் 28 -ம் தேதி மாலை 4:00 மணிக்குள் வெளியிடப்படும். இது ஒரு குறிப்பிட்ட மாதத்திற்கான தரவுகள் குறித்த விரைவான மதிப்பீடுகளாக வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து இறுதி மதிப்பீடு செய்யப்படும். இந்த நடைமுறை 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2122427
----
TS/SV/KPG/KR/DL
(Release ID: 2122521)