மத்திய பணியாளர் தேர்வாணையம்
தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வு (II), 2024-ன் எழுத்துத் தேர்வு முடிவை யுபிஎஸ்சி அறிவித்துள்ளது
Posted On:
11 APR 2025 6:02PM by PIB Chennai
2024 செப்டம்பர் 1-ந் தேதி மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (யுபிஎஸ்சி) தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி பயிற்சி வகுப்புக்கு நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் தகுதி பெற்ற 792 தேர்வர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு அகாடமியின் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை பிரிவுகளில் 154 ஆவது வகுப்புக்கும் கடற்படை அகாடமியின் 116-வது வகுப்புக்கும் படிப்புகள் தொடங்கும் தேதி பற்றிய விரிவான தகவல்களுக்கு, பாதுகாப்பு அமைச்சகத்தின் வலைத்தளங்களான www.joinindianarmy.nic.in, www.joinindiannavy.gov.in மற்றும் www.careerindianairforce.cdac.in ஐப் பார்வையிடவும்.
இந்தப் பட்டியல்கள் தயாரிப்பதில் மருத்துவப் பரிசோதனை முடிவுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2121011
------
TS/PKV/RR/RJ/DL
(Release ID: 2121060)