தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உமாங் செயலி வழியாக ஆதார் முக சரிபார்ப்பைப் பயன்படுத்தி யூஏஎன் உருவாக்குவதற்கு மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் சேவைகளை இபிஎப்ஓ பயன்படுத்துகிறது

Posted On: 09 APR 2025 1:55PM by PIB Chennai

தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ (EPFO), உமாங் (UMANG) மொபைல் செயலி மூலம் ஆதார் முக அங்கீகார தொழில்நுட்பத்தைப் (FAT) பயன்படுத்தி தனித்துவ கணக்கு எண்  எனப்படும் யூஏஎன் (UAN) உருவாக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் டிஜிட்டல் அதிகாரமளித்தலை நோக்கிய ஒரு புரட்சிகர நடவடிக்கையை இபிஎஃப்ஓ தொடங்கியுள்ளது. இந்த நேரடித் தொடர்பு இல்லாத, பாதுகாப்பான சேவை கோடிக்கணக்கான இபிஎஃப்ஓ உறுப்பினர்களுக்குத் தடையற்ற வகையில் முழுமையான டிஜிட்டல் அனுபவங்களை வழங்குவதில்  பெரும் முன்னேற்றமாக அமைந்துள்ளது.

தற்போது வரை, யூஏஎன் எண்கள் பெரும்பாலும் இபிஎஃப்ஓ-வுக்கு சமர்ப்பிக்கப்பட்ட பணியாளர் தரவைப் பயன்படுத்தி தொழில் நிறுவனங்களால் உருவாக்கப்பட்டு வந்தன. ஆதார் விவரங்கள் சரிபார்க்கப்பட்டாலும், சில தவறுகள் ஏற்பட வாய்ப்புகள் இருந்தன. பிழைகள் பெரும்பாலும் வைப்புத் தொகை திரும்பப் பெற கோரும் செயல்முறையின் போது அல்லது பிற இபிஎஃப்ஓ சேவைகளை பெற முயலும்போது சிக்கலை உண்டாக்கும். அப்போது  திருத்தங்கள் தேவைப்படுகின்றன. இதுபோன்ற சவால்களை எதிர்கொள்ள, இபிஎஃப்ஓ இப்போது உமாங் செயலி வழியாக முக அங்கீகாரத்தைப் பயன்படுத்தி நேரடி யூஏஎன் உருவாக்கத்தை செயல்படுத்துகிறது. இந்த சேவையை ஊழியர்கள்தொழில் நிறுவனத்தினர் இருவரும் பயன்படுத்தலாம். இது பல முக்கிய நன்மைகளை வழங்குகிறது:

ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களின் இருப்பிடத்திலேயே சேவைகளை வழங்குவதற்காக மை பாரத் தன்னார்வலர்களுடன் இணைந்து முக சரிபார்ப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஜீவன் பிரமான் மூலம் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதை இபிஎஃப்ஓ விரைவில் தொடங்கவுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2120326

***

TS/PLM/AG/RR


(Release ID: 2120386) Visitor Counter : 43
Read this release in: English , Urdu , Hindi