பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதம மந்திரி ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் திட்டத்துக்கு பட்ஜெட்டில் ரூ.24,104 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 9 அமைச்சகங்கள் மூலம் 11 திட்டங்களின் வழி செயல்படுத்தப்படுகிறது: திரு ஜூவல் ஓரம்

Posted On: 02 APR 2025 2:29PM by PIB Chennai

மாநிலங்களவையில் டாக்டர் அனில் சுக்தியோ ராவ் போண்டே எழுப்பிய கேள்விக்கு இன்று பதிலளித்த  பழங்குடியினர் நல அமைச்சர் திரு ஜுவல் ஓரம், 18 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் வசிக்கும்  பாதிக்கப்படக் கூடிய 75 பழங்குடியின சமூகங்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காக 2023 நவம்பர் 15 அன்று பிரதம மந்திரி ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் என்ற திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார் என்று கூறியுள்ளார்.

9 அமைச்சகங்களால் 11 திட்டங்கள் மூலம் இத்திட்டத்தின் நோக்கங்கள் பூர்த்தி செய்யப்படுகின்றன. பாதிக்கப்படக் கூடிய பழங்குடியினருக்கான பிரதமரின் இந்த மேம்பாட்டு திட்டத்திற்கான மொத்த பட்ஜெட்  செலவு ரூ.24,104 கோடி ஆகும். (மத்திய அரசின் பங்கு: ரூ.15336 கோடி மற்றும் மாநில அரசுகளின் பங்கு: ரூ.8768 கோடி).

இத்திட்டத்தின் செயல்திறனை மேம்படுத்த மாநில / யூனியன் பிரதேச அரசுகளுடன் இணைந்து பழங்குடியினர் நல அமைச்சகம் தொடர்ந்து தகவல், கல்வி மற்றும் தொலைத் தொடர்பு பிரச்சாரங்களை நடத்தி வருவதாக மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் தெரிவித்தார். இந்த முயற்சி பாதிக்கப்படக் கூடிய பழங்குடியினருக்கான பிரதமரின் மேம்பாட்டு திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இரண்டு  நாடு தழுவிய தகவல், கல்வி மற்றும் தொலைத்தொடர்பு பிரச்சாரங்கள் நடத்தப்பட்டன. இந்தப் பிரச்சாரங்கள் 2023, டிசம்பர் 15 முதல்  2024  ஜனவரி 15 வரை மற்றும் 2024 ஆகஸ்ட் 23  முதல் 2024 அக்டோபர் 02  வரை நடைபெற்றன. இந்தப் பிரச்சாரங்களின் போது தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவிலான நிகழ்வுகள் மற்றும் நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.

***

(Release ID: 2117713)

TS/IR/AG/SG

 


(Release ID: 2117831)
Read this release in: English , Urdu , Hindi