கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கப்பல் கட்டும் தொகுப்பிடங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு

प्रविष्टि तिथि: 01 APR 2025 3:28PM by PIB Chennai

நாடு முழுவதும் கப்பல் கட்டும் துறைகளை மேம்படுத்தவும் நவீனமயமாக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கப்பல் கட்டும் நடவடிக்கைகளில் அதிகப் பங்கேற்பை ஊக்குவிப்பதற்காக மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள்   அமைச்சகம் கடந்த ஜனவரி மாதம் (29.01.2025) கப்பல் கட்டும் நிதி உதவிக் கொள்கை வழிகாட்டுதல்களில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.

கடல்சார் தொழிலுக்கான நீண்டகால நிதியுதவிக்காக, ரூ. 25,000 கோடி தொகையுடன் கூடிய கடல்சார் மேம்பாட்டு நிதியம் உருவாக்கப்படும். இதில் அரசின் பங்களிப்பு 49 சதவீதம் வரை இருக்கும், மீதமுள்ள தொகை துறைமுகங்கள் மற்றும் தனியார் துறையிலிருந்து திரட்டப்படும்.

இந்தத் தகவலை மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு  இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2117250

***

TS/GK/AG/SG


(रिलीज़ आईडी: 2117315) आगंतुक पटल : 29
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी