விண்வெளித்துறை
azadi ka amrit mahotsav

விண்வெளித் துறையின் மேம்பாட்டில் தனியார் துறையின் பங்களிப்பு

Posted On: 26 MAR 2025 3:29PM by PIB Chennai

இன் ஸ்பேஸ் நிறுவனம் அரசு மற்றும் தனியார் கூட்டமைப்பின் கீழ் அரசு சாரா நிறுவனங்கள் மூலம் விண்வெளி சார்ந்த உள்நாட்டு கண்காணிப்பு அமைப்புகளை நிறுவ நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சிறிய அளவிலான செயற்கைக்கோள் செலுத்து வாகனம் எஸ்எஸ்எல்பி-க்கு தொழில்நுட்ப பரிமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

 

விண்வெளித்துறையின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும், புதுமைகளை ஊக்குவிப்பதற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும், தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதற்கும் தனியார் துறையுடன் அரசு இணைந்து செயல்பட விரும்புகிறது. இன் ஸ்பேஸ் நிறுவனத்தின் கீழ், விண்வெளித்துறை சார்ந்த பயிலரங்குகள் மூலம் உள்நாட்டு தாயரிப்புகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விவசாயம், பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை போன்ற துறைகளில் 2024 செப்டம்பர் முதல், ஆறு பயிலரங்குகள் வடகிழக்கு மாநிலங்களில், நடத்தப்பட்டுள்ளன. இந்தப் பயிற்சி பட்டறைகள், இந்திய விண்வெளித் துறையுடன் இணைந்து, உள்நாட்டு திறன்களை வெளிக் கொண்டு வரும் வகையில், விண்வெளி சார்ந்த பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதற்கும் உதவுகிறது.

 

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல், பிரதமர் அலுவலகம் மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2115227

 

*****

TS/SV/KPG/KR/DL


(Release ID: 2115489) Visitor Counter : 17


Read this release in: English , Urdu , Hindi