மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
நாய்களுக்கான சிறப்பு பாதுகாப்பிடங்கள்
Posted On:
26 MAR 2025 2:46PM by PIB Chennai
அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 246 (3)-ன்படி, கால்நடை பராமரிப்பு மாநிலப் பொறுப்பாகும். அரசியலமைப்பின் பிரிவு 243 (W) பன்னிரண்டாவது அட்டவணையின்படி திட்டங்களை செயல்படுத்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. எனவே, தெரு நாய்களைப் பராமரிக்க தங்குமிடம் வழங்குவது உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்பாகும். விலங்குகள் பிறப்பு கட்டுப்பாட்டு விதிகள், 2023, கருத்தடை மற்றும் ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி திட்டங்கள் மூலம் தெரு நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைக்க உள்ளாட்சி அமைப்புகள் செயலாற்றி வருகின்றன.
ஒரு நாய் நோய்வாய்ப்பட்டதாகவோ அல்லது ஆக்ரோஷமாகவோ இருந்தால், அதை சிகிச்சை மற்றும் கண்காணிப்புக்காக ஒரு விலங்கு நல அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும்.
"விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு விதிகள், 2023-ன் விதி 10-ன் படி, விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு திட்டத்தை செயல்படுத்த போதுமான எண்ணிக்கையிலான நாய் வளர்ப்பு, கால்நடை மருத்துவமனை வசதி போன்ற வசதிகளை வழங்குவது உள்ளூர் நிர்வாகத்தின் பொறுப்பாகும்.
இந்திய விலங்குகள் நல வாரியம், உள்நாட்டு நாய் இனங்களை பாதுகாக்கவும், தெரு நாய்களுக்கு மனித நேய தங்குமிடங்களை வழங்கவும், சமுதாய நாய்கள் / குட்டிகளை தத்தெடுத்து வளர்ப்பதையும் ஊக்குவித்து வருகிறது.
தெரு நாய்களின் எண்ணிக்கை மேலாண்மை, ரேபிஸ் ஒழிப்பு மற்றும் மனித-நாய் மோதலைக் குறைப்பதற்கான திருத்தப்பட்ட விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு நடைமுறை ஆகியவை குறித்த வழிகாட்டு முறைகளை இந்திய விலங்குகள் நல வாரியம் வெளியிட்டுள்ளது.
மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகேல் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.
***
(Release ID: 2115191)
TS/PLM/SG/KR
(Release ID: 2115301)