ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்றக் கேள்வி: கிராமப்புறங்களில் நீர் வழங்கல் திட்டங்களைச் செயல்படுத்துதல் மற்றும் மேலாண்மை தொடர்பான பயிற்சித் திட்டம்

Posted On: 24 MAR 2025 12:15PM by PIB Chennai

டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி தேசிய நீர் மற்றும் சுகாதார நிறுவனம் ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி நிறுவனமாகும். இந்த நிறுவனம் 24 பிப்ரவரி 2025 முதல் 28 பிப்ரவரி 2025 வரை போர்ட் பிளேரில் "கிராமப்புற நீர் வழங்கல் திட்டங்களின் செயல்பாடு மற்றும் மேலாண்மை" குறித்த ஐந்து நாள் பயிற்சித் திட்டத்தை ஏற்பாடு செய்து நடத்தியது.

கணினி திறமை, போதிய சமூக ஈடுபாடு போன்ற முக்கியமான சிக்கல்களை நிவர்த்தி செய்யத் தேவையான திறன்கள் மற்றும் அறிவுடன் நீர் மேலாண்மை தொடர்பான பணியில் ஈடுபட்டுள்ள பொறியாளர்களைத் தயார்படுத்துவதில் இந்தப் பயிற்சி கவனம் செலுத்தியது.

நிலத்தடி நீரை ஒழுங்குபடுத்துவதற்கான வழிகாட்டுதல்களை ஜல் சக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்களில் நிலத்தடி நீர் / நீரின் தேவைக்கேற்ப மேலாண்மை செய்வதற்கும் அதன் பயன்பாட்டை அதிகபட்சமாக்குவதற்கும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ஜல்சக்தி துறை இணையமைச்சர் திரு வி. சோமண்ணா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

***

TS/PLM/LDN/KR/DL


(Release ID: 2114582) Visitor Counter : 15


Read this release in: English , Urdu , Hindi