கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய கையெழுத்துப் பிரதிகள் இயக்கம்

Posted On: 24 MAR 2025 4:01PM by PIB Chennai

டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கைகளை விரிவாக்கம் செய்வதற்கும், நாட்டின் வளமான மூலபாடங்கள் மரபுகளை நிலைநிறுத்துவதற்கும் அவற்றின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கும் மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாட்டின் வளமான கையெழுத்துப் பிரதிகளின் பாரம்பரியத்தைப் பாதுகாத்து, ஆவணப்படுத்துவதன் மூலம் அதனை நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு செல்வதற்கான வாய்ப்பாக அமையும். கையெழுத்துப் பிரதிகளுக்கான தேசிய இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்முயற்சிகள் குறித்து மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த இயக்கம் 2024-ம் ஆண்டு முதல் 2031-ம் ஆண்டு வரை மத்திய அரசின் திட்டமாக 'அறிவுசார் இயக்கம்' என்ற பெயரில்  ரூ.482.85 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.

கணக்கெடுப்பு மற்றும் ஆவணப்படுத்தல்: நாட்டின் கையெழுத்துப் பிரதியின் விரிவான பதிவுகளைப் பராமரிப்பதற்கு ஏதுவாக அவற்றின் கணக்கடுப்பு மேற்கொள்ளப்பட்டு பதிவு செய்தல்.

பாதுகாத்து பேணுதல் இந்தியாவில் உள்ள களஞ்சியங்களில் இருக்கும் கையெழுத்துப் பிரதிகளை அறிவியல் ரீதியாக பாதுகாத்து பராமரித்தல்.

டிஜிட்டல்மயமாக்கல்: அனைவரும் எளிதாக பயன்படுத்தப்படக் கூடிய வகையில் தேசிய டிஜிட்டல் கையெழுத்துப் பிரதிகள் நூலகத்தை உருவாக்க கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

வெளியீடு மற்றும் ஆராய்ச்சி: அறிவுசார் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அரிய மற்றும் வெளியிடப்படாத கையெழுத்துப் பிரதிகளைத் திருத்தம் செய்தும, மொழிபெயர்த்து வெளியிடுதல்.

கையெழுத்துப் பிரதிகளுக்கான தேசிய இயக்கம் உத்தரப்பிரதேசம் உட்பட நாட்டின் கையெழுத்துப் பிரதிகளின் பாரம்பரியத்தைப் பாதுகாத்து, ஆவணப்படுத்துவதிலும், பரப்புவதிலும் முக்கியப் பங்கு வகித்துள்ளது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2114400

**

TS/SV/KPG/KR/DL


(Release ID: 2114537) Visitor Counter : 22


Read this release in: English , Urdu , Hindi