கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சாகர்மாலா திட்டம்

प्रविष्टि तिथि: 21 MAR 2025 3:54PM by PIB Chennai

நாட்டில் உள்ள 7,500 கி.மீ தொலைவிலான கடற்கரை மற்றும் 14,500 கி.மீ பயணிக்கக்கூடிய நீர்வழிகளைப் பயன்படுத்துவதன் மூலம் துறைமுகம் சார்ந்த வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன்படி, துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகத்தின் முன்னோடித் திட்டமான சாகர்மாலா திட்டத்தின் கீழ்   துறைமுக உள்கட்டமைப்பு, கடலோர படுகை, சாலை, ரயில்  போக்குவரத்து, மீன்பிடி துறைமுகங்கள், திறன் மேம்பாட்டு திட்டங்கள், கடலோர சமூக மேம்பாடு, கப்பல் முனையம், ரோ-பாக்ஸ் படகு சேவைகள் போன்ற பல்வேறு திட்டங்களுக்கு மாநில / யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அமைச்சகம் நிதி உதவி வழங்குகிறது. சாகர்மாலா திட்டத்தின் கீழ் பகுதி நிதியாக 9,407 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 119 திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இவற்றில் இதுவரை 72 திட்டங்கள் நிறைவடைந்துள்ளன.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2113674

***

TS/SV/AG/DL


(रिलीज़ आईडी: 2113840) आगंतुक पटल : 54
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी