ஆயுஷ்
ஆயுஷ் மருத்துவ நிறுவனங்கள் வாய் சுகாதார விழிப்புணர்வுக்கான இலவச பல் பரிசோதனைகள், பயிலரங்குகளை ஏற்பாடு செய்கின்றன
Posted On:
21 MAR 2025 6:09PM by PIB Chennai
உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு, ஆயுஷ் அமைச்சகத்தின் பல்வேறு மருத்துவ அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் வாய்வழி சுகாதாரத்தை பராமரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தில் அதன் தாக்கம் குறித்து அறிந்துகொள்ளும் வகையில், நாடு தழுவிய விழிப்புணர்வு இயக்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள் கலந்து கொள்ளும் பயிலரங்குகள், கலந்துரையாடல்கள் மற்றும் இலவச பல் பரிசோதனைகள் போன்ற நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. வாய் சுகாதாரப் பழக்கம், ஆரோக்கியத்தைப் பேணுவதற்கான நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் முதன்மை நோக்கமாகும்.
உலக அளவில் நோய் தொடர்பான ஆய்வு -2016 இன்படி வாய்வழி நோய்கள் காரணமாக 3.58 பில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பற்களின் சொத்தை உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் பரவலாக உள்ளது என்றும், ஆயுர்வேத சிகிச்சை முறையின் கீழ், வாய்வழி சுகாதாரத்தை மேம்படுத்தவும், வாய்க் குழி தொடர்பான பிரச்சினைகளைத் தடுக்கவும், பல் துலக்குதல், நாக்கு சுத்தம் செய்தல், வாய் கொப்பளித்தல், வாய்வழி குழியில் திரவ வடிவிலான மருந்து பயன்பாடு போன்ற சிகிச்சை முறைகள் அன்றாட சிகிச்சையின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2113787
***
TS/SV/AG/DL
(Release ID: 2113839)
Visitor Counter : 38