எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பசுமை எஃகு உற்பத்தி முறையை ஏற்று கடைபிடித்தல்

Posted On: 21 MAR 2025 1:53PM by PIB Chennai

நாட்டில் பசுமை எஃகு உற்பத்தியை மேற்கொள்வதற்கு நிதியுதவி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.  எஃகு உற்பத்தியில் குறைந்த அளவு கார்பன் உமிழ்வை வரையறுப்பதற்கும், வகைபிரிப்பதற்கும்  பசுமை எஃகுக்கான வகைப்பாட்டியலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்த நோக்கத்திற்காக இந்த அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட 14 பணிக்குழுக்களின் பரிந்துரைகளுக்கு ஏற்ப "இந்தியாவில் எஃகு துறையைப் பசுமையாக்குதல்: திட்டம் மற்றும் செயலாக்கம் என்ற தலைப்பில் எஃகு அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது,

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் கீழ் 2029-30 நிதியாண்டு வரை எஃகு துறையில் பசுமை ஹைட்ரஜனைப் பயன்படுத்துவதற்கான முன்னோடி திட்டங்களை செயல்படுத்த எஃகு அமைச்சகத்திற்கு ரூ.455 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தால் 2010 ஜனவரியில் தொடங்கப்பட்ட தேசிய சூரியமின் இயக்கம், சூரிய சக்தியின் பயன்பாட்டை ஊக்குவிப்பதோடு, எஃகு தொழிற்சாலைகளின் கார்பன் உமிழ்வைக் குறைக்கவும் உதவுகிறது.

இந்தத் தகவலை மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் எஃகு மற்றும் கனரகத் தொழில்கள் துறை இணையமைச்சர் திரு பூபதிராஜு சீனிவாச வர்மா  தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2113589

***

TS/GK/RJ/RR


(Release ID: 2113703) Visitor Counter : 20


Read this release in: English , Urdu , Hindi