நிதி அமைச்சகம்
நிதித்துறையில் சைபர் பாதுகாப்பை வலுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள்
Posted On:
18 MAR 2025 4:55PM by PIB Chennai
சைபர் பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் நிதித்துறை ஒழுங்குமுறை அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுடன் மத்திய அரசு இணைந்து தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இணைய குற்றங்களை விரிவான மற்றும் ஒருங்கிணைந்த முறையில் கையாள சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு ஒரு கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பை வழங்குவதற்காக உள்துறை அமைச்சகம் இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தை நிறுவியுள்ளது. அனைத்து வகையான இணைய குற்றங்கள் குறித்தும் பொதுமக்கள் புகாரளிக்க உதவும் வகையில், தேசிய சைபர் குற்ற இணையதளம் (https://cybercrime.gov.in) தொடங்கப்பட்டுள்ளது. இதில் பதிவாகும் குற்ற சம்பவங்கள், சட்ட விதிகளின்படி கையாளுதலுக்காக அந்தந்த மாநில/யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்படும். நிதி மோசடி குறித்து உடனடியாகப் புகாரளிப்பதற்கும், மோசடி செய்பவர்கள் நிதியைத் திருடுவதைத் தடுப்பதற்கும் 'மக்கள் நிதி குற்ற மோசடி அறிக்கையிடல் மற்றும் மேலாண்மை அமைப்பு' தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை, 13.36 லட்சம் புகார்கள் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நிதி மோசடி செய்பவர்களை அடையாளம் காணவும், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கவும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அடிப்படையிலான கருவியை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
இதேபோல், யூபிஐ பரிவர்த்தனைகளைப் பாதுகாக்க, பல்வேறு கட்டுப்பாடுகளும் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இந்தத் தகவலை நிதித்துறை இணை அமைச்சர் திரு பங்கஜ் சவுத்ரி இன்று மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
***
TS/GK/AG/DL
(Release ID: 2112488)