ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் ஆதார் அடிப்படையில் பணம் வழங்குதல்

Posted On: 18 MAR 2025 2:54PM by PIB Chennai

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்ட பயனாளிகளுக்கு சரியான நேரத்தில் ஊதியம் வழங்குவதை உறுதி செய்வதற்கும், பயனாளிகளின் வங்கிக் கணக்கு எண்களில் அடிக்கடி ஏற்படும் மாற்றங்கள் தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பதற்கும், ஆதார்- ஊதிய இணைப்பு முறையை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இது  கடந்த 2024 ஜனவரி 1-ம்  முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நேரடிப் பலன் பரிமாற்ற முறையில் ஊதியம் வழங்குவது பயனாளிகளிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.  இது பணம் நேரடியாகப் பயனாளிகளின் கணக்குகளுக்குச் சென்றடைவதை உறுதி செய்கிறது. 100 சதவீத  ஆதார் இணைப்பை அடைய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மத்திய அரசால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் தொழிலாளர்களுக்கு கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் ஒவ்வொரு நிதியாண்டிலும் விவசாயத் தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணின் ன் அடிப்படையில் ஊதிய விகிதங்களை மாற்றியமைக்கிறது.2023-24 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 2024-25 நிதியாண்டில் ஊதிய விகிதம் 7 சதவீதம் அதிகரித்துள்ளது.

2024-25 நிதியாண்டில்  கடந்த 13-ம் தேதி நிலவரப்படி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச வாரியாக திட்டப்பயனாளிகளுக்கு வழங்கப்படும் சராசரி ஊதியம் தமிழகத்தில் ரூ.275.14  ஆக உள்ளது.

இந்தத் தகவலை ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் திரு கமலேஷ் பாஸ்வான் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2112199

***

TS/GK/AG/KR


(Release ID: 2112368) Visitor Counter : 14


Read this release in: English , Urdu , Hindi