ஜல்சக்தி அமைச்சகம்
நாடாளுமன்றக் கேள்வி: குழாய் வழிக் குடிநீர் விநியோகமும் தூய்மை இயக்கமும்
Posted On:
17 MAR 2025 4:53PM by PIB Chennai
நாட்டில் உள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் போதுமான அளவில், பரிந்துரைக்கப்பட்ட தரத்தில், பாதுகாப்பான குழாய் நீர் வழங்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து செயல்படுத்தப்படும் ஜல் ஜீவன் இயக்கத்தை ஆகஸ்ட் 2019-ல் மத்திய அரசு தொடங்கியது. நகர்ப்புற ஜல் ஜீவன் இயக்கமும் தொடங்கப்பட்டுள்ளது.
தூய்மை இந்தியா இயக்கம் 2014 அக்டோபர் 2 அன்று தொடங்கப்பட்டது. தூய்மை இந்தியா இயக்கம் மக்கள் இயக்கமாக நடைபெறுகிறது. கிராமப்புறத் தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் 10 கோடிக்கும் அதிகமான தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
கிராமப்புற ஜல்-ஜீவன் இயக்கத்தில் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு செயல்பாட்டு மதிப்பெண் வழங்கப்படுகிறது. குழாய் இணைப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கான இடைப்பட்ட திருத்தங்களுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுடன் அறிக்கைகள் பகிரப்படுகின்றன.
இது தவிர, தூய்மை இந்தியா இயக்கம் (ஊரகம்) கட்டம்-2ன் செயல்பாட்டு வழிகாட்டுதல்களின்படி, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் தூய்மை இந்தியா இயக்கத்தின் இரண்டாம் கட்ட அமலாக்கம் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் மதிப்பீட்டு ஆய்வுகளை மேற்கொள்ளலாம்.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ஜல்சக்தி துறை இணையமைச்சர் திரு வி. சோமண்ணா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
TS/PLM/AG/DL
(Release ID: 2111962)
Visitor Counter : 16