பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வெடிமருந்து, வெடிகுண்டு, ஏவுகணைகளைக் கொண்டு செல்லும் 9வது படகின் அறிமுக விழா

Posted On: 12 MAR 2025 5:40PM by PIB Chennai

வெடிமருந்து, வெடிகுண்டு, ஏவுகணைகளைக் (ஏ.சி.டி.எம்) கொண்டு செல்லும் 9வது படகின்,(எல்.எஸ்.ஏ.எம் 23 - யார்டு 133) அறிமுக விழா மார்ச் 12, 25 அன்று மும்பையில் உள்ள கடற்படை கப்பல்கட்டும் தளத்தில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கடற்படை கமாண்டர் பொது மேலாளர் மணீஷ் விக், கலந்து கொண்டார்.

 

11 ஏ.சி.டி.எம் படகுகளை நிர்மாணித்து வழங்குவதற்கான ஒப்பந்தம் எம்.எஸ்.எம்.இ கப்பல் கட்டும் தளமான தானேயில் உள்ள சூர்யதீப்தா ப்ராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் மார்ச் 05, 2021 அன்று முடிவடைந்தது. எட்டு ஏ.சி.டி.எம் படகுகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன, மேலும் கப்பல் கட்டும் தளத்திற்கு நான்கு சல்லேஜ் பார்ஜ்களை நிர்மாணித்து இந்திய கடற்படைக்கு வழங்குவதற்கான ஒப்பந்தமும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எம்.எஸ்.எம்.இக்களை ஊக்குவிப்பதில் இந்திய கடற்படையின் உறுதிப்பாடு  எடுத்துரைக்கப்படுகிறது.

 

இந்திய கப்பல் வடிவமைப்பு நிறுவனத்துடன் இணைந்து கப்பல் கட்டும் தளம் இந்த படகுகளை உள்நாட்டிலேயே வடிவமைத்து, பின்னர் விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகத்தில் கடல்சார் தகுதியை உறுதி செய்வதற்காக மாதிரியை வெற்றிகரமாக சோதித்தது. இந்த படகுகள் இந்திய கப்பல் பதிவேட்டின் (ஐ.ஆர்.எஸ்) தொடர்புடைய கடற்படை விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு ஏற்ப கட்டப்பட்டுள்ளன. இந்த படகுகள் இந்திய அரசின் மேக் இன் இந்தியா மற்றும் தற்சார்பு இந்தியா  முயற்சிகளின் பெருமையை ஏந்திச் செல்கின்றன.

 

இந்தப் படகுகளை இணைப்பது, இந்திய கடற்படையின் செயல்பாட்டு உறுதிப்பாடுகளுக்கு உத்வேகத்தை அளிக்கும், இதன் மூலம் படகுத் தளங்கள் மற்றும் வெளிப்புற துறைமுகங்களில் பொருட்கள்/ வெடிமருந்துகளை இந்திய கடற்படை தளங்களுக்கு கொண்டு செல்வது, ஏற்றுவது மற்றும் இறக்குவது ஆகியவை எளிதாக்கப்படும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2110906

***

RB/ DL


(Release ID: 2111066) Visitor Counter : 16


Read this release in: English , Urdu , Hindi