ஜவுளித்துறை அமைச்சகம்
நாடாளுமன்றக் கேள்வி: ஜவுளித் தொழிலுக்கான புதிய திட்டம்
Posted On:
11 MAR 2025 12:16PM by PIB Chennai
நாடு முழுவதும் ஜவுளித் துறையை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு திட்டங்கள்/முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது. முக்கிய திட்டங்கள்/முன்முயற்சிகளில் பிரதமரின் மிகப் பெரிய ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலங்கள் மற்றும் ஆடை (பிஎம் மித்ரா) பூங்காக்கள் திட்டம் ஆகியவை அடங்கும். இது நவீன, ஒருங்கிணைந்த பெரிய அளவிலான, உலகத் தரம் வாய்ந்த தொழில்துறை சூழல் அமைப்பை உருவாக்க முயற்சிக்கிறது. இது முதலீடுகளை ஈர்ப்பதற்கும் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கும் உதவும்; பெரிய அளவிலான உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும் போட்டித்தன்மையை அதிகரிப்பதற்கும் மனிதனால் உருவாக்கப்பட்ட ஃபைபர் & ஆடை மற்றும் தொழில்நுட்ப ஜவுளி ஆகியவற்றில். உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டம் கவனம் செலுத்தும். தேசியத் தொழில்நுட்ப ஜவுளி இயக்கம் ஆராய்ச்சி, புத்தாக்கக்ஜகண்டுபிடிப்புகள் மற்றும் மேம்பாடு, சந்தை மேம்பாடு, திறன் மற்றும் ஏற்றுமதி மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.
ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கான உலகளாவிய மையமாக நாட்டை திகழச் செய்யும் வகையில் மத்திய அரசு 2027-28 வரை ஏழு ஆண்டு காலத்திற்கு ரூ.4,445 கோடி செலவில் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்புடன் ஏழு பிரதமரின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த ஜவுளி பிராந்தியம் மற்றும் ஆயத்த ஆடை பூங்காக்களை (பிஎம் மித்ரா) அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மித்ரா பூங்காக்களை அமைப்பதற்காக தமிழ்நாடு (விருதுநகர்), தெலங்கானா (வாரங்கல்), குஜராத் (நவ்சாரி), கர்நாடகா (கல்புர்கி), மத்தியப் பிரதேசம் (தார்), உத்தரப் பிரதேசம் (லக்னோ / ஹர்தோய்) மற்றும் மகாராஷ்டிரா (அமராவதி) ஆகிய 7 இடங்களை அரசு இறுதி செய்துள்ளது. இப்பூங்காக்கள் ஜவுளித் தொழிலை உலக அளவில் போட்டியிடவும் அதிக முதலீடுகளை ஈர்க்கவும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் உதவும்.
இந்தத் தகவலை மத்திய ஜவுளித் துறை அமைச்சர் திரு. கிரிராஜ் சிங் மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
***
(Release ID: 2110123)
TS/IR/RR/KR
(Release ID: 2110192)
Visitor Counter : 19