ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்ற கேள்வி: வருடாந்த நிலத்தடி நீரின் தர அறிக்கை

Posted On: 10 MAR 2025 5:51PM by PIB Chennai

வருடாந்திர நிலத்தடி நீர் தர அறிக்கை 2024 மத்திய நிலத்தடி நீர் வாரியத்தால் தயாரிக்கப்பட்டு 2024 டிசம்பரில் வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் பரவியுள்ள 15,259 இடங்களில் இருந்து நிலத்தடி நீர் மாதிரி மற்றும் பகுப்பாய்வை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. குடிநீர் மற்றும் விவசாய நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் நிலத்தடி நீரில் மின் கடத்துத்திறன், ஃப்ளூரைடு, ஆர்சனிக், கன உலோகங்கள், நைட்ரேட் போன்ற பல்வேறு தர அளவுருக்களை ஆய்வு செய்வதே இந்த அறிக்கையின் முக்கிய நோக்கமாகும். அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

 

மத்திய நிலத்தடி நீர் வாரியத்தால் புதிதாக நிறுவப்பட்ட நிலையான இயக்க நடைமுறையைப் பின்பற்றி, தரப்படுத்தப்பட்ட முறையின் அடிப்படையில் நாடு தழுவிய நிலத்தடி நீர் தர கண்காணிப்பு பயிற்சியின் முடிவுகளை இந்த அறிக்கை முன்வைக்கிறது.

 

இந்தியா முழுவதும் நிலத்தடி நீரின் தரம் கணிசமாக வேறுபடுவதை அறிக்கை கண்டறிந்துள்ளது. அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், மேகாலயா மற்றும் ஜம்மு-காஷ்மீர் போன்ற சில மாநிலங்களில், 100% நீர் மாதிரிகள் பி.ஐ.எஸ் தரத்தைப் பூர்த்தி செய்தன. இதற்கு நேர்மாறாக, ராஜஸ்தான், ஹரியானா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களின் சில தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மாசுபாடு கண்டறியப்பட்டது.

பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளில், 19.8% மாதிரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட நைட்ரேட் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, அதே நேரத்தில் ஆர்சனிக் மற்றும் ஃப்ளூரைடு முறையே 3.1% மற்றும் 9.04% மாதிரிகளில் அதிகமாக உள்ளன.

இந்தியாவில் நீர்ப்பாசனத்திற்கான நிலத்தடி நீரின் ஏற்புடைமை  பொதுவாக சாதகமானது, பெரும்பாலான மாதிரிகள் பாதுகாப்பான அளவு சோடியம் மற்றும் காரத்தன்மையை வெளிப்படுத்துகின்றன.

 

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ஜல் சக்தித் துறை இணையமைச்சர் திரு. ராஜ் பூஷண் சவுத்ரி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2109942

***

RB/DL


(Release ID: 2110033) Visitor Counter : 44
Read this release in: English , Urdu , Hindi