குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
தேன் இயக்கத்தின் கீழ் ஆறு மாநிலங்களுக்கு 2,050 தேனீ பெட்டிகள் மற்றும் தேனீக்கள் தொகுப்பை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத் தலைவர் திரு மனோஜ் குமார் வழங்கினார்
Posted On:
08 MAR 2025 1:32PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் 'புதிய இந்தியாவிற்கான புதிய காதி' இயக்கத்தை வலுப்படுத்த, மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத் தலைவர் திரு மனோஜ் குமார், தில்லியில் உள்ளஆணைய அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் ஆறு மாநிலங்களில் உள்ள 205 தேனீ வளர்ப்பவர்களுக்கு 2,050 தேனீ பெட்டிகள், தேனீக்கள் தொகுப்பு மற்றும் கருவிப் பெட்டிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு மனோஜ் குமார், பிரதமர் திரு நரேந்திர மோடியின் 'இனிப்புப் புரட்சியை' கிராமங்கள்தோறும் பரப்ப வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, தேனீ வளர்ப்பவர்களுக்கு தேனீ தொகுப்புகள் மற்றும் தேனீ பெட்டிகளை விநியோகிக்க 'தேன் இயக்கம்' தொடங்கப்பட்டுள்ளது என்பதை எடுத்துரைத்தார். ஜனவரி 14 முதல் பிப்ரவரி 27, 2025 வரைபிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவின் போது தேசிய அளவிலான கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் 'காதி புரட்சி' விளைவாக, கண்காட்சியில் ரூ.12.02 கோடி மதிப்புள்ள காதி பொருட்களின் வரலாற்று சிறப்புமிக்க விற்பனை பதிவு செய்யப்பட்டது. கண்காட்சியில் 98 காதி கடைகள் மற்றும் 54 கிராமத் தொழில் கடைகள் இடம்பெற்றிருந்தன, இவை மொத்தமாக ரூ. 9.76 கோடி காதி மற்றும் ரூ. 2.26 கோடி கிராமத் தொழில் பொருட்கள் விற்பனையைப் பதிவு செய்தன என்றும் அவர் கூறினார்.
கிராமத் தொழில் மேம்பாட்டுத் திட்டத்தின் பயனாளிகள், மும்பை மற்றும் தில்லியில் உள்ள காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைமையக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2109371
*****
PLM /DL
(Release ID: 2109462)