அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் உயிரி பொருளாதாரம் 10 மடங்கு அதிகரித்திருந்தாலும், இமயமலை பிரதேசங்களின் வேளாண்-உயிரி தொழில்நுட்பத் திறன் இன்னும் ஆராயப்படவில்லை: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 06 MAR 2025 7:41PM by PIB Chennai

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் உயிரி பொருளாதாரம் 10 மடங்கு அதிகரித்துள்ள நிலையில், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட இமயமலை பிரதேசங்களின் உயிரி தொழில்நுட்பத் திறன், குறிப்பாக வேளாண் உயிரி தொழில்நுட்பத் திறன் இன்னும் கண்டறியப்படவில்லை என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று தெரிவித்தார்.

2014-ஆம் ஆண்டில் 10 பில்லியன் டாலர் மதிப்பீட்டிலிருந்து 2024-ஆம் ஆண்டில் 130 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உயர்ந்த இந்தியாவின் உயிரி தொழில்நுட்பத் துறை பொருளாதாரம், 2030-ஆம் ஆண்டில் 300 பில்லியன் டாலரை எட்டும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங்கின் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் நடந்து வரும் உயிரி புரட்சியை எடுத்துரைத்த அவர், அதை மேற்கத்திய நாடுகளின் தகவல் தொழில்நுட்ப புரட்சியுடன் ஒப்பிட்டு, இந்த மாற்றத்திற்கு எரிபொருளாக இந்தியாவின் வளமான இயற்கை மற்றும் பல்லுயிர் வளங்களின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். 2013-14 ஆம் ஆண்டில் 1,485 கோடியாக இருந்த நேரடி மானியத் துறையின் பட்ஜெட் 2025-26 ஆம் ஆண்டில் 3,447 கோடியாக உயர்ந்துள்ளது, இது கிட்டத்தட்ட 130% அதிகரிப்பைக் குறிக்கிறது என்று அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

நறுமண இயக்கம் மற்றும் மலர் வளர்ப்பு புரட்சி போன்ற முன்முயற்சிகளில் சிறப்பு கவனம் செலுத்திஜம்மு காஷ்மீரில் வேளாண் – உயிரி தொழில்நுட்பத்தின் மாற்றத்தக்க திறனை அமைச்சர் அடிக்கோடிட்டுக் காட்டினார். உயிரி தொழில்நுட்பத்தில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எடுத்துரைத்து, நாட்டை இந்தத் துறையில் உலகளாவிய தலைமையாக அமைச்சர்  நிலைநிறுத்தினார்.

இந்தியாவின் அறிவியல் சாதனைகளின் கொண்டாட்டங்களையொட்டி, ஜம்முவில் "விவசாயத்தின் முழுமையான வளர்ச்சிக்கான உயிரி வேதியியல் மற்றும் உயிரி தொழில்நுட்பத்தில் வளர்ந்து வரும் கண்டுபிடிப்புகள்" என்ற தலைப்பில் நடைபெற்ற சர்வதேச மற்றும் தேசிய மாநாட்டில் டாக்டர் ஜிதேந்திர சிங் பேசினார். இந்த நாளை பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும் என்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி விடுத்த அழைப்பை அவர் பாராட்டினார், இந்த அழைப்பு உலகெங்கிலும் உள்ள இந்திய தூதரகங்களில் எதிரொலித்தது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2108904

 

-----

RB/DL


(Release ID: 2108939) Visitor Counter : 22


Read this release in: English , Urdu , Hindi