மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

"விவசாயம், கிராமப்புற வளம்" குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணைய வழிக் கருத்தரங்கில் கடல் மீன் வளம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது

Posted On: 02 MAR 2025 3:18PM by PIB Chennai

 

மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகர், திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங், நேற்று (மார்ச் 01, 2025) "விவசாயம், கிராமப்புற வளம்" குறித்த பட்ஜெட்டுக்கு பிந்தைய ஒரு நாள் இணையவழிக் கருத்தரங்கில் பங்கேற்றார். வேளாண், விவசாயிகள் நல அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கருத்தரங்கில் மீன்வளத்துறை இணை அமைச்சர்கள் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகேல், திரு ஜார்ஜ் குரியன் ஆகியோரும் பங்கேற்றனர்.

இதில் பிரதமர் திரு நரேந்திர மோடி முக்கிய உரையாற்றினார்.

"விவசாயம், கிராமப்புற வளம்" குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணை ஒளி கருத்தரங்கில் பல்வேறு துணை கருப்பொருள்கள் குறித்த இணையான விவாதங்கள் இடம்பெற்றன.

பிரதமரின் மீன்வள மேம்பாட்டு திட்டம் குறித்து இக்கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். இது மீன்வள உள்கட்டமைப்பை வலுப்படுத்தி, உற்பத்தியை இரட்டிப்பாக்கி, இத்துறையில் ஏற்றுமதியை அதிகரித்துள்ளது.

மீன்வளத்துறை தொடர்பான அமர்வில் முக்கிய தொழில்துறை வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள், பங்குதாரர்களின் பங்கேற்பு காணப்பட்டது. அவர்கள் ஆழ்கடல் மீன்பிடித்தல், சந்தை இணைப்புகள், மதிப்பு கூட்டல்,  நிலைத்தன்மை ஆகியவற்றின் முக்கிய அம்சங்களை விவாதித்தனர். இந்தியாவின் கடல் மீன்வளத் துறையை உலகளாவிய சிறப்புடன் மாற்ற உதவும் பயனுள்ள கொள்கை அமலாக்கம் குறித்தும் விவாதங்கள் இடம்பெற்றன.

***

PLM/KV

 


(Release ID: 2107545) Visitor Counter : 42


Read this release in: Urdu , Hindi , English