கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிங்கப்பூரில் கடல்சார் பயண வழிசெலுத்தல் உதவிகள் சர்வதேச அமைப்பின் (IALA) துணைத் தலைமையிடத்துக்கு இந்தியா தேர்வு

Posted On: 19 FEB 2025 5:47PM by PIB Chennai

சிங்கப்பூரில் உள்ள கடல்சார் பயண வழிசெலுத்தல் உதவிகள் சர்வதேச அமைப்பின்(IALA)  துணைத் தலைமையிடத்துக்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் செயலாளர் திரு. டி.கே. ராமச்சந்திரன் தலைமையில், இணைச்செயலாளர் திரு முகேஷ் மங்கல், கலங்கரை விளக்கத்துறை தலைமை இயக்குநர் திரு என். முருகானந்தம், துணை இயக்குநர் திரு எஸ் சரவணன் ஆகியோரைக் கொண்ட இந்தியக்குழு சிங்கப்பூரில் நடைபெற்ற கடல்சார் பயண வழிச்செலுத்தல் உதவிகள் சர்வதேச அமைப்பின் (ஐஏஎல்ஏ) முதலாவது கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஐஏஎல்ஏ  தனது முதலாவது பொதுச் சபைக் கூட்டத்தின் மூலம் ஒரு அரசு சாரா அமைப்பிலிருந்து (என்ஜிஓ)  அரசுகளுக்கு இடையிலான ஒரு அமைப்பாக (ஐஜிஓ) மாறியது. அங்கு இந்தியா அந்த அமைப்பின் துணை தலைமையிடத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. இது இந்தியாவின் வலுவான தலைமை மற்றும் கடல்சார் விவகாரங்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை சுட்டிக்காட்டுவதுடன், நிலையான மற்றும் பாதுகாப்பான கடல்சார் கப்பல் போக்குவரத்துக்கான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2104773

-----

TS/IR/KPG/DL


(Release ID: 2104819) Visitor Counter : 21


Read this release in: English , Urdu , Hindi , Marathi