புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கு மக்கள் உருவாக்கும் தரவுகளை மேம்படுத்துதல்" தலைப்பில் பயிலரங்கு: புள்ளியியல் அமைச்சகம் நடத்தியது

Posted On: 17 FEB 2025 6:36PM by PIB Chennai

மக்கள் தொடர்பான  தரவுகளைப் பயன்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, "இந்தியாவில் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கு மக்கள் மற்றும் மக்கள் அமைப்புக்கள் உருவாக்கும் தரவுகளை மேம்படுத்துதல்" என்ற தலைப்பில் அரை நாள் பயிலரங்கு இன்று (17.02.2025) புதுதில்லியில் நடைபெற்றது. மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் இந்தப் பயிலரங்கை ஏற்பாடு செய்து நடத்தியது.

தரவு இடைவெளிகளை நிவர்த்தி செய்வதற்கும் தேசிய புள்ளிவிவரச் சூழலில் உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதற்கும் தரவுகள் தொடர்பான புரிதலை மேம்படுத்துவதும் இந்தப் பயிலரங்கின் நோக்கமாகும். தரவு சூழல் அமைப்புகளை வலுப்படுத்துதல், ஆதார அடிப்படையிலான கொள்கை வகுப்பை வலுப்படுத்துவது ஆகியவை குறித்து இதில் விவாதங்கள் நடத்தப்பட்டன.

இந்தப் பயிலரங்கை புள்ளியியல் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் சௌரப் கார்க் தொடங்கி வைத்தார். மத்திய அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள், ஐநா நிறுவனங்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட சுமார் 75 பேர் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2104165   

***

TS/PLM/KPG/DL


(Release ID: 2104184) Visitor Counter : 19


Read this release in: English , Urdu , Hindi