மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
இந்தியாவின் மீன்வளம் அதிகரித்து வருகிறது
Posted On:
15 FEB 2025 10:18AM by PIB Chennai
உலகளாவிய மீன் உற்பத்தியில் சுமார் 8% பங்கைக் கொண்டு இந்தியா இரண்டாவது பெரிய மீன் உற்பத்தி செய்யும் நாடாகும். கடந்த இரண்டு தசாப்தங்களாக, இந்தியாவின் மீன்வளத் துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும் மாற்றத்தையும் கண்டுள்ளது. தொழில்நுட்ப முன்னேற்றங்கள் முதல் கொள்கை சீர்திருத்தங்கள் வரை, 2004 முதல் 2024 வரையிலான காலம் உலகளாவிய மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்திய மைல்கற்களால் குறிக்கப்பட்டுள்ளது. 2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், மீன்வளத் துறைக்கு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக ரூ. 2,703.67 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது. மீன்வளர்ப்பு மற்றும் கடல் உணவு ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கும் இந்தியாவின் சாதனைக்கு இது ஒரு சான்றாகும்.
2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிவிப்பு, நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்துதல், சுங்க வரிகளைக் குறைப்பதன் மூலம் விவசாயிகள் மீதான நிதிச் சுமையைக் குறைத்தல் மற்றும் கடல் மீன்வளத்தின் வளர்ச்சியை மேலும் மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
மீனவர்கள், விவசாயிகள், பதப்படுத்துபவர்கள் மற்றும் பிற மீன்வள பங்குதாரர்களுக்கு கடன் அணுகலை மேம்படுத்துவதற்காக இந்திய அரசு உழவர் கடன் அட்டையின் கடன் வரம்பை ரூ 3 லட்சத்திலிருந்து ரூ 5 லட்சமாக உயர்த்தியுள்ளது. இந்த நடவடிக்கை, துறையின் பணி மூலதனத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான நிதி எளிதில் அணுகக்கூடியதாக இருப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உற்பத்தியில் அதிகரிப்பு: மீன் உற்பத்தி 95.79 லட்சம் டன் (2013-14) மற்றும் 63.99 லட்சம் டன் (2003-04)-லிருந்து 184.02 லட்சம் டன் (2023-24) ஆக அதிகரித்துள்ளது. இது 10 ஆண்டுகளில் (2014-24) 88.23 லட்சம் டன் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
உள்நாட்டு மற்றும் மீன்வளர்ப்பு மீன் உற்பத்தியில் 2004-14 ஆம் ஆண்டில் 26.78 லட்சம் டன்கள் என்ற அளவில் இருந்து 2014-24 ஆம் ஆண்டில் 77.71 லட்சம் டன்கள் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
கடல் மீன் உற்பத்தி 5.02 லட்சம் டன்னிலிருந்து (2014-24), 10.52 லட்சம் டன் (2004-14) இரட்டிப்பாகியுள்ளது. கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் அறிக்கையின்படி, 2023-24 நிதியாண்டில், இந்தியா ரூ 60,523.89 கோடி மதிப்புள்ள 17,81,602 மெட்ரிக் டன் கடல் உணவுகளை ஏற்றுமதி செய்துள்ளது. 2003-04 ஆம் ஆண்டில் 609.95 கோடியாக இருந்த ஏற்றுமதி மதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.
மீன்வளத் துறையை பொருளாதார ரீதியாக சாத்தியமானதாகவும் வலுவானதாகவும் மாற்றுவதற்கான முதல் படியாக நீலப் புரட்சி திட்டம் இருந்தது. அதன் பல பரிமாண நடவடிக்கைகளுடன், நீலப் புரட்சி முக்கியமாக மீன்வளர்ப்பு மற்றும் உள்நாட்டு மற்றும் கடல்சார் மீன்வள வளங்களிலிருந்து மீன்வள உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறது. நீலப் புரட்சி திட்டம் 2015-16 நிதியாண்டில் 5 ஆண்டுகளுக்கு ரூ. 3000 கோடி மத்திய ஒதுக்கீட்டுடன் தொடங்கப்பட்டது.
செப்டம்பர் 2024 நிலவரப்படி, ஆந்திரா, குஜராத், லட்சத்தீவுகள், கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்டிரா, கோவா, கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் ரூ. 291.37 கோடி திட்ட செலவில் 937 செயற்கைப் பாறைகள் நிறுவ ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
2004 முதல் 2024 வரையிலான காலம் இந்தியாவின் மீன்வளத் துறைக்கு மாற்றத்தை ஏற்படுத்திய காலகட்டம். கொள்கை அமலாக்கம், தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு மற்றும் நிலையான நடைமுறைகளில் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம், இந்தியா தனது மீன் உற்பத்தியை மேம்படுத்தியது மட்டுமல்லாமல், அதன் மீன்பிடி சமூகங்களின் சமூக-பொருளாதார வளர்ச்சியையும் உறுதி செய்துள்ளது. நாடு முன்னேறும்போது, புதுமை மற்றும் நிலைத்தன்மையில் தொடர்ந்து கவனம் செலுத்துவது இந்த மேல்நோக்கிய பாதையை பராமரிப்பதற்கு முக்கியமாகும்.
***
PKV/KV
(Release ID: 2103481)