பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய கடற்படையை சேர்ந்த முதல் பயிற்சிப் படை கப்பல்கள் கம்போடியா வந்துள்ளன

Posted On: 14 FEB 2025 5:01PM by PIB Chennai

தென்கிழக்கு ஆசியாவிற்கான போர்க் கப்பல்கள் பயிற்சியின் ஒரு பகுதியாக, இந்திய கடற்படையை சேர்ந்த ஐ.என்.எஸ் சுஜாதா மற்றும் ஐ.சி.ஜி.எஸ் வீரா ஆகியவற்றைக் கொண்ட முதல் பயிற்சிப் படை கப்பல்கள் கம்போடியாவின் சிஹானூக்வில் துறைமுகத்தை வந்தடைந்தன. இந்திய கடற்படை கப்பல்களை கம்போடியாவின் கடல்சார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் வரவேற்றனர்.

இன்று முதல் வரும் 17-ம் தேதி வரை இந்திய கடற்படையும்ராயல் கம்போடிய கடற்படையும் பயிற்சிகளில் ஈடுபடுகின்றன. இரு நாடுகளிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு, ஆயுத பயன்பாடுகளை மேம்படுத்துவதை இது நோக்கமாகக்  கொண்டுள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற கடல் பயிற்சியில் கம்போடிய கப்பல்கள் பங்கேற்றன. கடற்படைப் பிரிவின் வருகை இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் உறவை மேலும் பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2103248

----

RB/GK/RR/DL


(Release ID: 2103407) Visitor Counter : 27


Read this release in: English , Urdu , Marathi , Hindi