பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வெடிமருந்து, ஏவுகணைகளைக் கொண்டு செல்லும் 8-வது படகு வெற்றிகரமாக இயக்கி வைக்கப்பட்டது

Posted On: 14 FEB 2025 6:54PM by PIB Chennai

வெடிமருந்து, ஏவுகணைகளைக் கொண்டு செல்லும் 8-வது படகு பிப்ரவரி 14, 2025 அன்று மகாராஷ்டிராவின் மீரா பயந்தரில் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.  இந்த நிகழ்வில் கொமடோர் என். கோபிநாத் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

ஏவுகணை மற்றும் வெடிமருந்துகளைக் கொண்டு செல்லும் எட்டாவது படகை அமைப்பதற்கான ஒப்பந்தம் விசாகப்பட்டினத்தில் உள்ள எம்.எஸ்.எம்.இ கப்பல் கட்டும் தளத்தில் உள்ள செகான் இன்ஜினியரிங் ப்ராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் பிப்ரவரி 19, 2021 அன்று முடிவடைந்தது. இந்த படகுகள் இந்திய கப்பல் வடிவமைப்பு நிறுவனம் மற்றும் இந்திய கப்பல் பதிவேடு (ஐ.ஆர்.எஸ்) ஆகியவற்றுடன் இணைந்து கப்பல் கட்டும் தளத்தால் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்படுகிறது. விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகத்தில் (என்.எஸ்.டி.எல்) மாதிரி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தக் கப்பல் கட்டும் தளம் இதுவரை ஏழு படகுகளை வெற்றிகரமாக வழங்கியுள்ளது மற்றும் இந்திய கடற்படையால் அதன் செயல்பாட்டு பரிணாமத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தப் படகுகள் இந்திய அரசின் மேக் இன் இந்தியா மற்றும் தற்சார்பு இந்தியா  முயற்சிகளை மேலும் வலுப்படுத்துகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2103328

 

----

RB/DL


(Release ID: 2103406) Visitor Counter : 24


Read this release in: English , Urdu , Marathi , Hindi