பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தில்லி ராணுவ மருத்துவமனையின் (ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை) செவிலியர் கல்லூரியின் 11-வது தொகுப்பைச் சேர்ந்த 29 செவிலிய மாணவர்களின் குத்துவிளக்கேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது

Posted On: 09 FEB 2025 8:13PM by PIB Chennai

தில்லி ராணுவ மருத்துவமனையின் (ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை) செவிலியர் கல்லூரியின் 11-வது தொகுப்பைச் சேர்ந்த 29 செவிலியர் மாணவர்களின் குத்துவிளக்கேற்றும் விழா பிப்ரவரி 08, 2025 அன்று நடைபெற்றது. மூத்த அதிகாரிகள், எம்.என்.எஸ் அதிகாரிகள், ஓய்வு பெற்ற அதிகாரிகள், சிவில் நர்சிங் கல்லூரிகளின் பிரதிநிதிகள் விழாவில் கலந்து கொண்டனர்.

மாணவர்களிடையே உரையாற்றிய ராணுவ மருத்துவமனையின் (ஆராய்ச்சி & பரிந்துரை) கமாண்டண்ட் லெப்டினென்ட் ஜெனரல் சங்கர் நாராயண்,  தொழில்முறை தரத்தை நிலைநிறுத்தமாறு அவர்களுக்கு ஊக்கமளித்தார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற  ஜெனரல் ராணுவ நர்சிங் சேவையின் கூடுதல் இயக்குநர் (ஏ.டி.ஜி.எம்.என்.எஸ்) மேஜர் ஜெனரல் ஷீனா பி.டி., மாணவர்கள் செவிலியர் உறுதிமொழியை ஏற்க வைத்தார்.

இந்த நிகழ்வு அறிவு, திறமை மற்றும் ஞானத்தை கற்றவர்களிடமிருந்து கற்போருக்குப் பரப்புவதைக் குறிக்கிறது. எம்.என்.எஸ். இன்  கூடுதல் தலைமை இயக்குநர் விளக்கை முதல்வர் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கினார், அவர்கள் அதை செவிலியர் மாணவர்களுக்கு வழங்கினர்.

செவிலியர் சேவை என்பது அக்கறை மற்றும் நமது வாடிக்கையாளர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அழைப்பு என்ற செய்தியுடன் விழா நிறைவடைந்தது.

***

(Release ID: 2101189)
TS/BR/RR


(Release ID: 2101232) Visitor Counter : 63
Read this release in: English , Urdu , Hindi , Marathi