பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்பு மேலாண்மைக் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு
இடுகை இடப்பட்ட நாள்:
02 FEB 2025 12:54PM by PIB Chennai
செகந்திராபாத்தில் உள்ள பாதுகாப்பு மேலாண்மைக் கல்லூரி , தனது வருடாந்திர தேசிய கருத்தரங்கை ஜனவரி 30-31 ஆகிய தேதிகளில் நடத்தியது. மூத்த ராணுவ அதிகாரிகள், வியூக வல்லுநர்கள் மற்றும் முன்னணி கல்வியாளர்கள் இதில் கலந்து கொண்டு, நவீன போரில் உருவாகி வரும் தலைமைத்துவ கட்டமைப்பு குறித்து விவாதித்தனர். சீர்குலைக்கும் தொழில்நுட்பங்கள் மற்றும் சிக்கலான புவிசார் அரசியல் மாற்றங்களின் சகாப்தத்தில் தகவமைப்புத் தலைமையின் முக்கியமான தேவையை வலியுறுத்தி, பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் அனில் சௌஹான் சிறப்புரை ஆற்றினார்.
ஆயுதப்படைகளுக்குள் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேம்படுத்துவதன் மூலம் தேசிய பாதுகாப்பு நோக்கங்களுடன் ராணுவத் தலைமையின் அவசரத் தேவையை இந்தக் கருத்தரங்கு வலுப்படுத்தியது.
டிசம்பரில் 1970 இல் நிறுவப்பட்ட பாதுகாப்பு மேலாண்மை கல்லூரி (CDM), சமகால மேலாண்மை சிந்தனை, கருத்துக்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளுடன் மூத்த ராணுவத் தலைமையை சித்தப்படுத்துவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முதன்மையான முப்படை-சேவை நிறுவனமாக உள்ளது. பல ஆண்டுகளாக, அதன் தேசிய கருத்தரங்குகள் பாதுகாப்பு சவால்கள் மற்றும் தன்னம்பிக்கை முதல் புவிசார் அரசியல் அதிகார மாற்றங்கள் வரையிலான முக்கியமான கருப்பொருள்களை எடுத்துரைத்து, இந்தியாவின் ராணுவ எதிர்காலத்தை வடிவமைப்பதில் அதன் பங்கை உறுதிப்படுத்துகிறது.
***
PKV/KV
(வெளியீட்டு அடையாள எண்: 2098900)
வருகையாளர் எண்ணிக்கை : 62