பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடற்படையின் முதல் அரை மாரத்தான் புதுதில்லியில் நாளை நடைபெறுகிறது

Posted On: 01 FEB 2025 9:35AM by PIB Chennai

கடற்படை நடத்தும் முதல் அரை மாரத்தான் நாளை (2025 பிப்ரவரி 02) புது தில்லியில் நடைபெறுகிறது.

21.1 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர் ஆகிய மூன்று பிரிவுகளில் இது நடைபெறவுள்ளது. இதில்  பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பங்கேற்பாளருக்குச் சிறந்த அனுபவத்தை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்வு ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் தொடங்கும். இந்தியா கேட் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கடமைப் பாதை போன்றவை வழியாக இப்போட்டி நடைபெறும்.  இந்த மாரத்தானை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் திரு மன்சுக் எல் மண்டாவியா கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்வில் மூத்த அதிகாரிகள், ஆயுதப்படைகளின் உயர் அதிகாரிகள், பொதுமக்கள், புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்வார்கள்.

 இந்த நிகழ்வுக்கு முக்கிய நிறுவனங்கள் உதவுகின்றன. இந்த நிகழ்வு உடற்பயிற்சி, ஒழுக்கம், தேசிய பெருமையின் உணர்வு ஆகியவற்றைக் கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

***

(Release ID: 2098334)
TS/PLM/RR/KR


(Release ID: 2098361)
Read this release in: English , Urdu , Hindi