புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலக அளவில் எரிசக்தி மாற்றத்தில் முன்னெப்போதும் இல்லாத வேகம், அதிக உற்பத்தி ஆகியவற்றில் இந்தியா முன்னணி நாடாக திகழ்கிறது- மத்திய அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி

Posted On: 29 JAN 2025 7:11PM by PIB Chennai

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் குறித்து எடுத்துரைத்த மத்திய புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி, அத்துறையின் உற்பத்தியில் முன்னெப்போதும் இல்லாத வேகம், அதிக உற்பத்தி ஆகியவற்றுடன் உலக அளவில் எரிசக்தி துறையில் மாற்றங்களைக் கொண்டு வருவதில் இந்தியா முன்னணி நாடாக உள்ளது என்று கூறினார். புதுதில்லியில் ஃபிக்கி ஏற்பாடு செய்திருந்த மூன்றாவது இந்திய எரிசக்தி மாற்றம் தொடர்பான மாநாட்டில் அவர் உரையாற்றினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியா எரிசக்தி மாற்றத்திற்கான இலக்குகளை நிர்ணயித்துள்ளதுடன், அந்த இலக்கை சாதனை வேகத்தில் அடைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக திரு ஜோஷி சுட்டிக்காட்டினார். இந்தியா ஏற்கனவே 100 ஜிகாவாட் சூரிய மின் உற்பத்திக்கான திறனை எட்டியுள்ளது. வரும் ஆண்டுகளில் ஆண்டு ஒன்றுக்கு 50 ஜிகாவாட் புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான உற்பத்தித் திறனை உருவாக்க உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில், இந்தியாவின் நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க திறன் ஏறத்தாழ 200% அதிகரித்துள்ளது, 2014-ம் ஆண்டில் 75.52 ஜிகாவாட்டிலிருந்து தற்போது 220 ஜிகாவாட்டாக அதிகரித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2097419

-----

SV/KPG/DL


(Release ID: 2097445)
Read this release in: English , Urdu , Hindi , Kannada