பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சேவை வழங்கலை மேம்படுத்துவது தொடர்பான கூட்டம்- நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை நடத்தியது

இடுகை இடப்பட்ட நாள்: 16 JAN 2025 11:10AM by PIB Chennai

 

நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையானது மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் தலைமை சேவை ஆணையர்கள் மற்றும் ஆணையர்களுடன் சிறந்த நடைமுறைகளை பரிமாறிக் கொள்வது தொடர்பான கூட்டத்தை நடத்தியது.

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களையும், அரசையும் நெருக்கமாகக் கொண்டுவந்து மின்னணு சேவைகளை வழங்குவதன் மூலம் சேவை வழங்கலை மேம்படுத்துவது தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

நிர்வாக சீர்திருத்தங்கள் துறை செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மகாராஷ்டிரா, ஹரியானா, பஞ்சாப், சண்டிகர், உத்தரகண்ட், அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களின் சேவை  உரிமைகள் ஆணையத்தின்  தலைமை ஆணையர்கள் மற்றும் ஆணையர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2093273   

------------

TS/PLM/RS/KV

 


(வெளியீட்டு அடையாள எண்: 2093315) வருகையாளர் எண்ணிக்கை : 50
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi