சுரங்கங்கள் அமைச்சகம்
சுரங்கத் துறையின் எதிர்காலம் தொடர்பான சிந்தனை அரங்கம்: மத்திய அமைச்சர் திரு கிஷன் ரெட்டி பங்கேற்பு
Posted On:
08 JAN 2025 5:59PM by PIB Chennai
சுரங்க அமைச்சகம் இன்று புதுதில்லி விஞ்ஞான் பவனில் மத்திய நிலக்கரி, சுரங்கத் துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி தலைமையில் முக்கியமான சிந்தனை அரங்கம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. மத்திய நிலக்கரி இணையமைச்சர் திரு சதீஷ் சந்திர துபே, சுரங்க அமைச்சகத்தின் செயலாளர் திரு வி.எல். காந்தராவ், அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், சுரங்கத் தொழில்துறை பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். சுரங்கத் துறைக்கான எதிர்கால உத்திகள், புதுமை, நிலைத்தன்மை, உள்ளூர் உற்பத்தியை அதிகரித்தல் ஆகியவை தொடர்பாக இதில் விவாதிக்கப்பட்டது.
மத்திய அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி தமது உரையில், முக்கியமான கனிமங்களில் தற்சார்பை அடைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். அரசு, தனியார் துறைக்கு இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர், வருடாந்திர இலக்குகளை அடைய ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
ஆராய்ச்சி முயற்சிகளில் நவீன தொழில்நுட்பங்களையும், தொழில்துறை நிபுணத்துவத்தையும் ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தை மத்திய இணையமைச்சர் திரு சதீஷ் சந்திர துபே எடுத்துரைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2091215
****
TS/PLM/RS/DL
(Release ID: 2091251)