கனரகத் தொழில்கள் அமைச்சகம்
மின்சார வாகனங்களுக்கான மின்னேற்று நிலையங்கள்
Posted On:
20 DEC 2024 5:32PM by PIB Chennai
கனரக தொழில்துறை அமைச்சகம் இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை மக்கள் ஏற்றுக்கொள்வதை ஊக்குவித்து வருகிறது. 2024 செப்டம்பர் 29 அன்று, மின்சார வாகனத் தத்தெடுப்பை விரைவுபடுத்துவதற்கும், மின்னேற்று உள்கட்டமைப்பை நிறுவுவதற்கும், நாட்டில் மின்சார வாகன உற்பத்தி சூழல் அமைப்பின் வளர்ச்சியை அதிகரிப்பதற்கும் பிரதமரின் புத்தாக்க வாகனமேம்பாட்டில்மின்சார வாகனப் புரட்சித் திட்டத்தை(பிஎம் இ-ட்ரைவ்) அறிவித்தது. இந்தத் திட்டத்திற்கு இரண்டு ஆண்டு காலத்திற்கு ரூ.10,900 கோடி பட்ஜெட்டாக ஒதுக்கப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட மொத்த பட்ஜெட்டில், மின்சார வாகன பொது மின்னேற்று நிலையங்களை நிறுவுவதற்கு ரூ. 2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், மின்சார அமைச்சகம் செப்டம்பர் 17, 2024 அன்று "மின்சார வாகன மின்னேற்று உள்கட்டமைப்பு-2024-ல் உருவாக்கம் மற்றும் செயல்பாட்டிற்கான வழிகாட்டுதல்களை" வெளியிட்டுள்ளது. இது நாட்டில் இணைக்கப்பட்ட மற்றும் ஒன்றோடொன்று இயங்கக்கூடிய மின்சார வாகனங்களுக்கான மின்னேற்று உள்கட்டமைப்பு வலைப்பின்னலை உருவாக்குவதற்கான தரநிலைகள் மற்றும் நெறிமுறைகளை கோடிட்டுக் காட்டுகிறது.
மின்சார அமைச்சகத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, நாடு முழுவதும் 25,202 மின்சார வாகன பொது மின்னேற்று நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. தமிழகத்தில் 1413 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கனரக தொழில்கள் மற்றும் எஃகுத் துறை இணையமைச்சர் திரு பூபதிராஜு சீனிவாச வர்மா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
TS/PKV/AG/DL
(Release ID: 2086620)
Visitor Counter : 58