பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய இலகுரக பீரங்கி அதிக உயரத்தில் பலமுறை துல்லியமாக சுட்டு முக்கியமான மைல்கல்லை எட்டியது
இடுகை இடப்பட்ட நாள்:
12 DEC 2024 9:36PM by PIB Chennai
இந்திய இலகுரக பீரங்கி (ஐ.எல்.டி) 4200 மீட்டருக்கும் அதிக உயரமான இடத்தில் பல்வேறு நிலைகளில் பல முறை சுட்டு ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. இது, செப்டம்பர் 2024 இல் பாலைவன சூழலில் முதல் கட்ட சோதனையைத் தொடர்ந்து நடந்தது. இந்த இலகுரக பீரங்கி, இந்திய ராணுவத்தின் தற்காலிக பணியாளர்களின் தரத் தேவைகளுக்கு எதிராக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டி.ஆர்.டி.ஓ) ஆய்வகமான சென்னையில் உள்ள போர்த் தளவாட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் வரையறுக்கப்பட்டு, வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது தொழில்துறை பங்குதாரரான லார்சன் & டூப்ரோ பிரிசிஷன் இன்ஜினியரிங் & சிஸ்டம்ஸ் மூலம் தயாரிக்கப்படுகிறது.
25 டன் கவச தாக்குதல் வாகனமாக ஆயுதப் படைகளின் அதிக உயரமான பகுதிகளின் பயன்பாடுகளுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்ய ஐ.எல்.டி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த முறையில், உயரமான இடங்களில் செயல்விளக்கம் செய்வதற்கான வடிவமைப்பு மூன்று ஆண்டுகளில் எட்டப்பட்டுள்ளது.
ஐ.எல்.டி.யின் ஏர்லிஃப்ட் திறனும் இந்திய விமானப்படையால் நிரூபிக்கப்பட்டது. இத்தகைய திறன் தொலைதூர மற்றும் சாலை அல்லது ரயில் வழியாக அணுக கடினமாக உள்ள இயக்க நிலைமைகளில் ஐ.எல்.டி-ஐ விரைவாக கொண்டு செல்ல உதவும். இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமானப்படையால் தீவிரமாக ஆதரிக்கப்பட்ட இந்த இரண்டு கட்ட உள்நாட்டு செயல்திறன் சோதனைகளுடன், ஐ.எல்.டி பயனர் சோதனைகளுக்கு வழங்கப்படுவதற்கு முன்பு இன்னும் சில சோதனைகளுக்கு உட்படுத்தப்படும்.
இலகுரக பீரங்கியின் வெற்றிகரமான சோதனை முயற்சிக்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், இந்திய ராணுவம், இந்திய விமானப்படை மற்றும் எல் அண்ட் டி ஆகியவற்றுக்கு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார்.
தொழில்துறை பங்குதாரர் எல் அண்ட் டி உட்பட ஒட்டுமொத்த இலகுரக பீரங்கி குழுவையும் அவர்களின் முயற்சிகளுக்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை செயலாளரும், டி.ஆர்.டி.ஓ தலைவருமான டாக்டர் சமீர் வி காமத் பாராட்டினார்.
***
(Release ID: 2083984)
AD/BR/RR
(வெளியீட்டு அடையாள எண்: 2084085)
வருகையாளர் எண்ணிக்கை : 97