எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிலாய் எஃகு ஆலைக்கு நில மாற்றம்

Posted On: 03 DEC 2024 5:05PM by PIB Chennai

290.26 ஏக்கர் மற்றும் 151.46 ஏக்கர் நிலத்தை சத்தீஸ்கர் மாநில அரசுக்கு மாற்றுவதற்கான முன்மொழிவு முறையே செயில் வாரியத்தின் 152வதுமற்றும் 236வதுகூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டது.  நில பரிமாற்றத்தின் நிலை பின்வருமாறு:

290.26 ஏக்கர் நிலத்தைப் பொறுத்தவரைதேவையான அனைத்து நடைமுறைகளும் 22.01.2022 அன்று ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் (பிலாய் ஸ்டீல் பிளான்ட்) மூலம் முடிக்கப்பட்டுஉரிமை மாற்றத்திற்காக சத்தீஸ்கர் மாநில அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

151.46 ஏக்கர் நிலத்தைப் பொறுத்தவரைஎல்லை நிர்ணயம் மற்றும் சர்வே 04.09.2021 அன்று முடிக்கப்பட்டுநில மாற்றத்திற்கான வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தம்  (பிலாய் எஃகு ஆலை) சத்தீஸ்கர் மாநில அரசுக்கு 15.12.2022 அன்று நில மாற்றத்திற்கான ஒப்பந்தத்திற்காக அனுப்பப்பட்டுள்ளது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய எஃகு மற்றும் கனரகத் தொழில்கள் துறை அமைச்சர் திரு.எச்.டி. குமாரசாமி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

***

 

TS/PKV/DL

 
 
 

(Release ID: 2080384)
Read this release in: English , Urdu , Hindi